இந்த மாத ஸ்டார் சிறுகதை சுருக்கம்

                                        image

 சுஜாதாவின்  “ பேப்பரில் பேர்”

 

எல்லாருக்கும் சிறு வயதில் கிராமத்தில் கிரிக் கெட் , கபடி, கில்லி தண்டா என்று ஆடிய சுவாரசியமான அனுபவம் இருக்கும். சுஜாதா தன் பாணியில்  ஸ்ரீரங்கம்  கிரிக்கெட்  கிளப்பில் பொடியன்கள் கூட ஆடிய அனுபவத்தைக் கதையாகச் சொல்லுகிறார்.

 

கே வி தான் ஹீரோ – கேப்டன்

 தஞ்சாவூர் டீம் – பெரிய டீம்

 நீ நல்லா  ஆடுவியோல்லியோ?

 சுமாரா ஆடுவேன் – ரங்கராஜன் (சுஜாதா)

  மாட்ச்  நிஜ மாட்ச்சா ?

 உனக்கு ஏண்டா இந்த வம்பெல்லாம்? பெரிய டீம்னா   எங்கேயாவது எக்கச்சக்கமா பந்து     போட்டு  மர்ம ஸ்தா னத்துல பட்டுரப் போறது.

தஞ்சாவூர் டீம் வந்தபோது வயத்தில் புளியைக் கரைத்தது. ஒவ்வொருத்தரும் மாமா      மாமாவாக தடித்தடியாக இருந்தார்கள். ( ஸ்ரீரங்கம் டீமில் பொடியன்கள் தான் ஜாஸ்தி)

முதலில் இவர்கள் கூட ஆட மறுத்தார்கள். கடைசியில் விளையாடி  கே வியும் சுஜாதாவும் ஓபனிங் பேட்ஸ்மேனாக ஆடி 52 ரன் எடுத்தார்கள் ( அதில் சுஜாதா 4 ரன் தான்.) கே வியின் புண்ணியத்தில் அவர்கள் 152 ரன் எடுத்தார்கள். தஞ்சாவூர்  டீமை 132ல்  சுருட்டினார்கள். ( அம்பயரை வேறு கையில் போட்டுக்கொண்டு எல் பி டபுள்யூ கொடுக்காமல் செய்து விட்டான் கே வி.)

அடுத்த நாள் இந்த வெற்றிச் செய்தி  இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் மகா ஓரத்தில் “ K V Srinivasan was ably supported by Rengarajan என்ற நியூசும் வந்ததாம்.

சுஜாதா சொல்கிறார்: 

 “இப்போது எல்லா பேப்பரிலும் எத்தனையோ முறை என் பேர் வருகிறது. ஆனால் அந்த   தினம் ஒரு மூலையில் ஒரு வரியில் கிடைத்த துல்லியமான சந்தோஷம் எனக்குத்திரும்பக் கிடைக்கவில்லை”

“பேப்பரில் பேர்” எவ்வளவு நிதர்சனம்!!