நாராணீயாம்ருதம்
நாராயணர் சொன்ன நாராயணீயம்
ஆராதனை செய்யும் புண்யாமிர்தம்
நாராயணீயம் சுவை தேனாமிர்தம்
பாராயணம் செய்ய பாலாமிர்தம்
- சிரக்கம்பம்
இருக்கையில் இருக்கும் வரை
இறக்கைகள் தேவையில்லை
சிரக்கம்பம் செருக்கெடுத்தால்
சிரமே தேவையில்லை
- மம்மத ராசா
வில்லெடுத்து வந்தார் சேர நாட்டு ராசா
நெல்லெடுத்து வந்தார் சோழ நாட்டு ராசா
சொல்லெடுத்து வந்தார் பாண்டி நாட்டு ராசா
செல் எடுத்து வந்தார் நம்ம பெரம்பலூர் ராசா
மத்த ராசாவுக்கு ஜே ஜே போடு!
நம்ம ராசாவுக்கு ஜி ஜி போடு!