முருகா முருகா வருவாயா?
- முருகா முருகா வருவாயா?
- திருவாய் திறந்து தருவாயா?
- உன்னைக் காண ஓடிவந்தேன்
- என்னை நானே தந்துவிட்டேன்
- பழநிப்பழமாய் பிசைந்துவிட்டாய்
- பழமுதிர் சோலையாய் மாற்றிவிட்டாய்
- செந்தூர் அலையில் மிதந்து வந்தேன்
- தணிகை மலையில் தவழ்ந்து வந்தேன்
- சுவாமி மலையைச் சுற்றி வந்தேன்
- குன்றத்து வலையில் சிக்கிக் கொண்டேன்
- வள்ளிக் கணவன் துள்ளி நின்றான்
- வள்ளிக் கிழங்கென அள்ளிக் கொண்டான்
- என்னிரு விழியில் பள்ளி கொண்டான்
- பன்னிரு கரத்தால் பின்னிக் கொண்டான் !
- முருகா முருகா வருவாயா?
- திருவாய் திறந்து தருவாயா?