கவிதை வரிகள்

முருகா முருகா வருவாயா?

                                                           image

  • முருகா முருகா வருவாயா?
  • திருவாய் திறந்து தருவாயா?
  •  உன்னைக் காண ஓடிவந்தேன்
  • என்னை நானே தந்துவிட்டேன்
  • பழநிப்பழமாய் பிசைந்துவிட்டாய்
  • பழமுதிர் சோலையாய் மாற்றிவிட்டாய்
  • செந்தூர் அலையில் மிதந்து வந்தேன்
  • தணிகை மலையில் தவழ்ந்து வந்தேன்
  • சுவாமி மலையைச் சுற்றி வந்தேன்
  • குன்றத்து  வலையில் சிக்கிக் கொண்டேன்

  • வள்ளிக் கணவன் துள்ளி நின்றான்
  • வள்ளிக் கிழங்கென அள்ளிக் கொண்டான்
  • என்னிரு விழியில் பள்ளி கொண்டான்
  • பன்னிரு கரத்தால் பின்னிக் கொண்டான் !
  • முருகா முருகா வருவாயா?
  • திருவாய் திறந்து தருவாயா?