கவிதை வரிகள்

                                               எழுது

  image

அஞ்சுகின்ற விழியினிலே  கருமை மை எழுது

கெஞ்சுகின்ற இதழினிலே கவிதைப் பொய்  எழுது

மிஞ்சுகின்ற நெஞ்சினிலே பஞ்சணையைத் தான் எழுது

விஞ்சுகின்ற இடையினிலே சிந்தனைத் தேன் எழுது

 

                         தம்பி சின்னத் தம்பி

 

 வானத்தை பூமியுடன்    இணை க்கும் கம்பி –அது

கொட்டுகின்ற மழைத்துளி தான் சொல்லு தம்பி

கானத்தை நெஞ்சுடனே இணைக்கும் கம்பி –அது

மீட்டுகின்ற வீணை தான்  சொல்லு தம்பி

 

மேகத்தில் துடிதுடிக்கும்   தும்பி தும்பி – வான்

நட்சத்திரம் என்று நீயும்   சொல்லு தம்பி

மோகத்தில் துடி துடிப்பார்  வெம்பி வெம்பி – திரை

நட்சத்திரம் என்று நீயும்  சொல்லு தம்பி

 

வானத்தில் நிலவுகின்ற  நிலவு தம்பி –அது

போல ஒரு பொண்ணு    வந்தா என்னை நம்பி

சொர்க்கத்தைப் பார்த்தோமே எம்பி எம்பி

 மிச்சத்தைக் கேட்காதே    சின்னத் தம்பி