பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் பாடலில்  பிடித்த வரிகள்

image

 சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்  

சிந்திடும் மலரே ஆராரோ! 

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி  

மனிதனாக வாழ்ந்திட வேண்டும்  
மனதில்  வையடா  -தம்பி  மனதில்  வையடா  
வளர்ந்துவரும் உலகத்துக்கே  
வலது கையடா – நீ  வலது கையடா

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக்  கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும் பொன்னே ஏனிந்த சிரிப்பு ?

நான் கருங்கல்லு சிலையோ – காதல் எனக்கு இல்லையோ
வரம்பு மீறுதல் முறையோ

துன்பக்கடலைத் தாண்டும் போது  தோணி யாவது கீதம்

இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்து மகா சமுத்திரத்தை  இங்கேயிருந்து தாண்டிடுவேன்

 இரைபோடும்  மனிதற்கே இரையாகும் வெள்ளாடே

காடு விளஞ்சென்ன மச்சான்  – நமக்கு
கையும் காலும் தானே மிச்சம்

சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும்
சித்திரக் கைத்தறி சேலையடி