பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் பாடலில் பிடித்த வரிகள்
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி
மனிதனாக வாழ்ந்திட வேண்டும்
மனிதனாக வாழ்ந்திட வேண்டும்
மனதில் வையடா -தம்பி மனதில் வையடா
வளர்ந்துவரும் உலகத்துக்கே
வலது கையடா – நீ வலது கையடா
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும் பொன்னே ஏனிந்த சிரிப்பு ?
நான் கருங்கல்லு சிலையோ – காதல் எனக்கு இல்லையோ
வரம்பு மீறுதல் முறையோ
துன்பக்கடலைத் தாண்டும் போது தோணி யாவது கீதம்
இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்து மகா சமுத்திரத்தை இங்கேயிருந்து தாண்டிடுவேன்
இரைபோடும் மனிதற்கே இரையாகும் வெள்ளாடே
காடு விளஞ்சென்ன மச்சான் – நமக்கு
கையும் காலும் தானே மிச்சம்
சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும்
சித்திரக் கைத்தறி சேலையடி