மன்னர் ஜோக்ஸ்

 

வீரபாகு  என்ற மன்னர் பெயரை கல்வெட்டில் யார் மைசூர்பாகு என்று மாத்தியது?

 

போரில் தானே புறமுதுகு காட்டுவார். அந்தப்புரத்திலிருந்து ஏன் இப்படி தலை தெறிக்க ஒடி வருகிறார்?

மகாராணி வெளக்கமாத்தை எடுத்துக்கொண்டு துரத்தி வருகிறார்களாம்.

image 

பாரி ஓரி காரி வரிசையில் நானும் சேர வேண்டும் அமைச்சரே!

பூதகேசரி என்ற தங்கள் பெயரை பூரி என்று சுருக்கி விடலாம் மன்னா!

 

வரிக்குதிரை புலவர் அருகே வர ஏன் பயப்படுகிறது?

வரிகளைத் திருடும் புலவர் அல்லவா அவர்!

 

 தினமும் ஒரு ஜைனப் பெண்ணைக் கேட்கிறாரே மன்னர் ?

அவர் ஜைன மதத்தைத் தழுவப் போகிறாராம்!

 

மந்திரி நமது நாட்டில் ஏன் தோசையே இல்லை?

ஆசையை ஒழிக்கவேண்டும் என்ற அரசாணையில் தவறுதலாக தோசையை என்று அச்சுப்பிழை ஏற்பட்டு விட்டது  மன்னா!

 

சிபி மன்னர் பரம்பரையில் வந்த நம் மன்னர் என்ன செய்கிறார் பார்த்தாயா? புறாக் கறியை தொடையில் வைத்து வெட்டுகிறார் !

image

 

காபி ராகத்தில் பாடும் புலவரிடம் கொஞ்சம் சிக்கரி சேர்த்திருக்கலாம் என்றும் சொல்வது கொஞ்சமும் சரியில்லை மன்னா!

 

என்னது ! எதிரி நாட்டு யானைப் படையை நமது அரசர் பொடிப் பொடியாக்கி விட்டாரா?

பொடி டப்பாவை நமது மன்னர் தவறிக் கீழே  போட்டார். யானைப்படை தும்மித் தும்மி தனக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டு அழிந்து விட்டது.

 

மன்னர் ஏன் போர் என்றதும் தளபதியை அழைக்காமல் பழ வியாபாரியை அழைக்கிறார்?

போன வாரம் அரண்மனையில் இருந்த  அத்தனை வாளையும் போட்டு பேரீச்சம்பழ அல்வா சாப்பிட்டு விட்டாராம்!

 

மன்னா! நமது ஆட்சியில் மிகமும் கேவலமான ஊழல் ஒன்று நடைபெற்றுவிட்டது !
 என்ன அது?
பூஜை வறட்டியில்  மாட்டு சாணத்துக்கு பதிலாக யாரோ யானை சாணத்தைக் கலந்து விட்டார்களாம்!

 பக்கத்து நாட்டு ராஜா மலிவு விலையில் இட்லிக் கடை,  கள்ளுக் கடை வைத்ததைப் பார்த்து நீங்களும் மலிவு விலையில் சலூன் வைப்பது கொஞ்சமும் சரியில்லை மன்னா!

 மன்னா நமது மீனவப் படகுகள் கடலில் சென்ற போது எதிரி  மன்னன் எல்லாவற்றையும் பிடித்து விட்டான்!
என்ன  துணிச்சல்! கடலிலிருந்த எல்லா மீன்களையும் ஏற்கனவே பிடித்து விட்டானா?