விநாயகர் பாடல்கள்

image

 

  • ஐந்து கரத்தனை  யானை  முகத்தனை
  • இந்தின் இளம் பிறை போலும்  எயிற்றனை
  • நந்தி  மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
  • புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!
  • வாக்குண்டாம் நல்ல  மனமுண்டாம் மாமலராள்
  • நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
  • துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
  • தப்பாமல் சார்வார் தமக்கு.
  • பாலும்  தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
  • நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
  • துங்கக்  கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
  • சங்கத் தமிழ் மூன்றும் தா.
  • அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்பிறந்த
  • தொல்லை போம் போகாத்துயரம் போம்
  • நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்தில் மேவு
  • கணபதியைக் கைதொழுதக் கால்.
  • விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
  • விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
  • விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
  • கண்ணிற் பணிமின் கனிந்து.
  • மங்கள த்து நாயகனே மண்ணாளும்  முதலிறைவா
  • பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
  • சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தைச் சங்கரிக்கும்
  • எங்கள் குலவிடிவிளக்கே எழில்மணியே கணபதியே
  • திருவாக்கும் செய் கருமம் கைகூட்டும் செஞ்சொல்
  • பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
  • ஆதலால் வானவரும் ஆனைமுகத்தானைக்
  • காதலால் கூப்புவார் தம்கை.