மண்ணாங்கட்டி
மண்ணாங்கட்டிக்கு ஒரு சுண்ணாம்பு பொட்டு வைத்து
தண்ணீரில் குளிப்பாட்டி – அது
கண்ணீரில் கரைவதைப் பார்த்து பார்த்து அவ
கைகொட்டிச் சிரிச்சாளாம் …. ஓ
கைகொட்டிச் சிரிச்சாளாம் !
வாழை நாரெடுத்து அழகா முழம் தொடுத்து
ரோஜா மாலை ஒண்ணு செஞ்சாளாம் – அது
வாடாம இருக்க அசங்காமல் இருக்க
அடுப்புக் குள்ளே அதை வைச்சாளாம் !
ஆட்டம் ஆடவேண்டி மெட்டு இட்டுக் கட்டி
பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்டாளாம்!
ராகம் தொடங்கையில் நாகப் பாம்பு ஒண்ணு
கழுத்தைக் கட்டிக் கொண்ட கதையாச்சே !
பாட்டி மத்தெடுத்து சட்டிப் பானையிலே
கெட்டித் தயிரை நல்லா கடைஞ்சாளாம்!
வெண்ணை திரண்டு வந்து கண்ணைப் பறிக்கையிலே
மண்ணைப் போட்டு விட்ட கதையாச்சே !!