பெருமாளே (விஜயலக்ஷ்மி)

image

பெருமாளே !       பெருமாளே !
ஸ்ரீ ரங்க நாதப்     பெருமாளே !
நாடி  வருகின்ற   கோடி       மக்களின்
குறை தீர்க்கும்     பெருமாளே – எங்கள்
குறை தீர்க்கும்     பெருமாளே !

பாற்கடலில்        பள்ளி       கொண்ட    பெருமாளே !
பாதங்களைப்       பணிகின்றோம்     இந்நாளே !
அறிவும்           இல்லாத    பொருளும்   இல்லாத
பாமரரைக்         காத்திடணும்  – இந்தப் 
பாமரரைக்         காத்திடணும் 

அலையலையாய்   மக்கள் கூட்டம்     வந்திடணும்
கோவிந்தன்  உன்  நாமம்       பாடிடணும்
ரத்ன சேவை கண்டிடணும்      முத்து சேவை கண்டிடணும்
ஏகாதசி      திருநாளிலே – வைகுந்த
ஏகாதசி      நன்னாளிலே !

பாரெல்லாம் உன்  நாமம்       பாட        வேண்டும்
தெருவெல்லாம்    பக்தி        வெள்ளம்    ஓட   வேண்டும்
தேடி உன்னை     நாடணும்    நாடி உன்னைப்     பாடணும்
நாராயணன்        நாமம்       எந்நாளுமே  – ஸ்ரீமந்
நாராயணன்        நாமம்       எந்நாளுமே !!