நான்கு என்றதும் நினைவுக்கு வரும் நால்வர்
நம்மைக் கடைசியில் தூக்கும் அந்த நால்வர்
நான்கு என்றதும் வணங்கத் தோன்றும் நால்வர்
நமக்கு தேவாரம் தந்த சமயக் குரவர் நால்வர்
அப்பர் சுந்தரர் சம்மந்தர் மாணிக்க வாசகர் !
நான்கு என்றதும் வழிகள் காட்டிடும் திசைகள்
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
நான்கு என்றதும் தெரியும் பருவம் நான்கு
வசந்தம் கோடை இலையுதிர் வாடை
நான்கு என்றதும் சர்ச்சைக்குரிய வகுப்பு நான்கு
பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன்
நான்கும் அன்றைய நாற்கரத்தில் நான்கு பக்கம்
உயர்ந்தவன் தாழ்ந்தவர் நான்கில் என்றும் கிடையாது
சீட்டுக் கட்டைப்போல அதுவும் நான்கு ஜாதி
உயர்ந்தது தாழ்ந்தது சீட்டுக் கட்டிலும் கிடையாது
நாம் போற்றித் துதிக்கும் பேர்களும் நால்வர்
மாதா பிதா குரு தெய்வம்
நாம் போற்றிப் படிக்கும் வேதங்கள் நான்கு
ரிக் யஜுர் சாமம் அதர்வணம்
மனிதரைக் கட்டிப் போடும் விலங்குகள் நான்கு
பெற்றோர் சுற்றார் துணை மக்கள்
மனிதரை உயர்த்திக் காட்டும் மையங்கள் நான்கு
தனம் குணம் கல்வி உழைப்பு ! !