எம்மதமும் நல் மதம்

image

image

ராமருக்கு          கோயில்     கட்டப்       போறேண்டா – அதில்
பாபருக்கு          சிலை       வைக்கப்    போறேண்டா !
ஜீசஸைக்         கும்பிடத்    தான்        போறேண்டா – அவர்
தேஜஸுக்கு        மண்டியிட   வாறேண்டா !
அல்லாவைத்      தொழுதிடத்  தான்        போறேண்டா – அவர்
எல்லார்க்கும்       நல்லதையே தர்வார்டா !

கண்ணன்    சொன்ன     கீதையைத்தான்    கேளேண்டா
கர்த்தரின்        பைபிளைத்தான்    படியேண்டா      
அல்லாவின்    குரானைத்தான்     ஒதேண்டா
எல்லாமே   ஒண்ணு     தாண்ணு          புரியும்டா !

கணபதிக்குத்       தோப்புக்கரணம்    போடேண்டா
மரண பயம்       உன்னை விட்டு    போகும்டா !
மாதாகோவிலில்      மெழுகுவர்த்தி     ஏத்தேண்டா
மனசில் உள்ள     இருட்டெல்லாம்    மறையும்டா
அஞ்சு வேளை      பள்ளி வாசல்      செல்வோம்டா
அஞ்சுகிற          தீமையெல்லாம்    தொலையும்டா !

ஆண்டவன்      எல்லோருக்கும்    ஒண்ணு     ஒண்ணு –   அதை
அறியாதவன்       தலையிலெல்லாம்  மண்ணு     மண்ணு           தெரிஞ்சுக்கோ      தெரிஞ்சுக்கோ      நல்லாத்     தெரிஞ்சுக்கோ
புரிஞ்சுக்கோ       புரிஞ்சுக்கோ       எல்லாம்     புரிஞ்சுக்கோ !!