ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய !
ஐந்து முதல் ஐம்பது வரை அதே திரு மந்திரம் !
ஐம்பது முதல் ஆயுள் வரை அதே மூல மந்திரம் !
ஐந்திலே வளை ஐம்பதில் நிலை !
ஐந்திலே கலை ஐம்பதில் கவலை !
ஐந்து விரலும் ஒன்றல்ல ஒன்றாய்க் கூடும்
அடிப்பதற்குக் கூடும் அணைப்பதற்கும் கூடும்
ஐந்தை பஞ்சமம் என்பர் !
பஞ்ச பாண்டவர் பஞ்ச பூதம் பஞ்ச மா பாதகம் !
எண்களில் ஐந்து வரைதான் கொஞ்சல்கள்
ஒண்ணு ஒண்ணாக இரண்டு ரெண்டாக
மூன்று மூணாக நான்கு நாலாக
ஐந்து அஞ்சாக வழக்கில் இருக்கும்
ராமாயணத்தில் அஞ்சைப் பற்றிப் பாடல்
அஞ்சிலே ஒன்று – வாயு – அவர் மைந்தன் அனுமன்
அஞ்சிலே ஒன்று – மண் – அதில் உதித்த சீதையைத் தேடி
அஞ்சிலே ஒன்று – கடல் – அதனைத் தாண்டி
அஞ்சிலே ஒன்று – ஆகாயம் – அதன் வழியாய்ச் சென்று
அஞ்சிலே ஒன்று – தீ – இலங்கையை எரித்தான்
அஞ்சனை பெற்ற மைந்தன் அனுமனை வணங்கினால்
அஞ்சுதல் அகன்று அஞ்சாமை சேரும் உண்மை !!