ஐந்து

image

ஐந்தெழுத்து       மந்திரம்     நமசிவாய !
ஐந்து முதல்       ஐம்பது      வரை அதே  திரு மந்திரம் !
ஐம்பது முதல்     ஆயுள்      வரை அதே  மூல மந்திரம் !
ஐந்திலே           வளை      ஐம்பதில்    நிலை !
ஐந்திலே           கலை       ஐம்பதில்    கவலை !
ஐந்து             விரலும்     ஒன்றல்ல   ஒன்றாய்க்   கூடும்
அடிப்பதற்குக்      கூடும்       அணைப்பதற்கும்         கூடும்
ஐந்தை            பஞ்சமம்    என்பர் !

பஞ்ச  பாண்டவர்   பஞ்ச பூதம்  பஞ்ச மா    பாதகம் !
எண்களில்         ஐந்து       வரைதான்   கொஞ்சல்கள்
ஒண்ணு           ஒண்ணாக   இரண்டு     ரெண்டாக
மூன்று            மூணாக     நான்கு நாலாக
ஐந்து             அஞ்சாக     வழக்கில்    இருக்கும்

image

 
ராமாயணத்தில்     அஞ்சைப்    பற்றிப்      பாடல்
அஞ்சிலே ஒன்று   – வாயு –    அவர்       மைந்தன்    அனுமன்
அஞ்சிலே ஒன்று   – மண் –     அதில்   உதித்த      சீதையைத் தேடி
அஞ்சிலே ஒன்று   – கடல் –     அதனைத்    தாண்டி
அஞ்சிலே ஒன்று   – ஆகாயம் – அதன்       வழியாய்ச்   சென்று
அஞ்சிலே ஒன்று   – தீ –        இலங்கையை எரித்தான்
அஞ்சனை  பெற்ற      மைந்தன்    அனுமனை  வணங்கினால்
அஞ்சுதல்   அகன்று     அஞ்சாமை  சேரும்      உண்மை !!

image