ஆனந்த் நகர் புத்தாண்டு தமிழ்க் கவிதைப் போட்டி
ஆனந்த் நகரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற கவிஞர்களின் அருமையான வரிகள்!
தலைப்பு!
வாருங்கள் தமிழை வளர்ப்போம்!
முதல் பரிசு : சு. ராகுல்
ஆதியே இல்லா தமிழைக் கொண்ட நாமெல்லாம் ஒளிதரும் பெரும் ஜோதியே!
உணர்வோம் நாமும் உரைப்போம் தமிழை, வெல்வோம் உலகை வருவாய்த் தமிழ்ப் படையே!
இரண்டாம் பரிசு : ரெ .நா. ராஜன்
அறிவுப்புப் பலகையில் அனுதினமும் திருக்குறளை நாம் எழுதிடுவோம்!
தமிழ் கற்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் நாம் வளர்த்திடுவோம்!
மூன்றாம் பரிசு: தே.பத்மஜா
தொன்று தொட்டு வந்த மொழி நம் சங்கத் தமிழ் – அதை
இன்று நாம் பேசும் அளவோ வெறும் குங்கமச் சிமிழ்!
சங்கீதமாய் நம் காதில் ஒலிக்க வேண்டிய தமிழ் – போலி
இங்கிதம் பார்த்து கைவிடப்படும் நிலை ஏன்?
முதல் பரிசு (சிறுவர்) : விஷ்ணு
பிறப்பால் எனது தாய்மொழி தமிழ் இல்லை -எனினும்
பிறந்த மண்ணின் மொழி -நான் பிறந்ததும் கேட்ட மொழி ….
மூன்றே வருடங்கள் முனைப்புடன் தமிழ் படித்தேன்
முழு மூச்சுடன் தமிழைக் கற்றேன் பெற்றேன் மகிழ்ச்சியை!
மற்ற கவிதைகள்
கஸ்தூரி:
கைகூப்பி வணங்குவது நம் பழக்கம்
தலையில் அடித்துக் கொள்ளல் பிறர் பழக்கம்!
தமிழ்ச்செல்வி :
தமிழன்னையை முதியோர் விடுதியில் விட்டுவிடாமல்
நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பேணிக் காப்போம்!
ஜெயலக்ஷ்மி :
தமிழின் வேரில் வெந்நீராய் அந்நிய மொழிக் கலாச்சாரம்
மெல்லத் தமிழ் இனி வேகமாய்ச் சாகுமோ?
போதும் தமிழா! கணிணி விட்டு நிமிர்ந்து பார்!
அலை பேசிக்கு செவி தவிர்!
தமிழன்னை விசும்பலுக்கும் செவிகொடு!
விஜி:
என்னவளே….உன்னைவிடவும் அழகான ஒருத்தியைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் …..
அவள் என் அன்னையால் அறிமுகம் செய்யப்பட பேரழகி….
அவள் பெயர் “ தமிழ் ”
அனன்யா ;
நம் பிள்ளைகளுக்கு தமிழை இழக்காமல் கொடுப்போம்!
அனைவருக்கும் குவிகத்தின் பாராட்டுதல்கள்!
பக்கம் 16/25