நான் விதையானால் என்னைப் புதைத்துவிடு
நான் கதையானால் என்னை எழுதிவிடு
நான் செடியானால் என்னைப் பதித்து விடு
நான் கொடியானால் என்னை ஒடித்துவிடு
நான் மண்ணானால் என்னுள் புதைந்துவிடு
நான் பெண்ணானால் என்னுள் முடங்கிவிடு
நான் பொன்னானால் என்னுள் உருகிவிடு
நான் விண்ணானால் என்னுள் பறந்துவிடு
நான் மழையானால் என்னைப் பொழியவிடு
நான் பனியானால் என்னை சிலிர்க்கவிடு
நான் கடலானால் என்னைச் சீறவிடு
நான் அலையானால் என்னைத் தவிக்கவிடு
நான் பண்ணானால் என்னைப் பாடிவிடு
நான் புண்ணானால் என்னைக் கீறிவிடு
நான் கள்ளானால் என்னைப் புளிக்கவிடு
நான் புள்ளானால் என்னைப் பறக்கவிடு
நான் அமிழ்தானால் என்னை விழுங்கிவிடு
நான் தமிழானால் என்னை முத்தமிடு
நான் உடலானால் என்னுள் கலந்துவிடு
நான் உயிரானால் என்னைப் பறக்கவிடு
நான் நீயானால் என்னை வென்றுவிடு
நான் நானானால் என்னைக் கொன்றுவிடு
பக்கம் 23/25