இப்படை தோற்கின் …

image

போர்ப் படைகளின் அளவு :

ஒரு எண்ணிக்கை (ENTITY) = ஒரு தேர்ப்படை  அல்லது ஒரு யானைப்படை அல்லது ஒரு குதிரைப்படை  அல்லது ஒரு காலாட்படை 

ஒரு பத்தி = ஒரு தேர்ப்படை +  ஒரு யானைப்படை +                              3 குதிரைப்படை + 5  காலாட்படை = 10  எண்ணிக்கை

ஒரு குல்மம் =  3 பத்தி = 30 எண்ணிக்கை

ஒரு காணம்  = 3 குல்மம் = 90 எண்ணிக்கை

ஒரு பாகினி = 3 காணம் = 270 எண்ணிக்கை

ஒரு கிரிதலை = 3 பாகினி  = 810 எண்ணிக்கை

ஒரு சாமு = 3 கிரிதலை = 2430 எண்ணிக்கை

ஒரு அக்ரோணி  = 10 சாமு = 24300 எண்ணிக்கை 


மகாபாரத்தில் அர்ஜூன் , அபிமன்யு இறந்த மறு நாள்,                            8 அக்ரோணி சேனையை அழித்ததாகக் கூறப்படுகிறது.  அப்படியென்றால் 1,94,400 எண்ணிக்கையை அழித்தானா? 

image

தமிழகத்தில்,  சேனை என்பது மிகப் பெரிய அமைப்பு. ஒரு நாட்டில் 1-3 சேனைகள் இருக்கும். சேனைகளின் எண்ணிக்கை தேவைகளைப் பொறுத்தும் அது இருக்கும் இடத்தைப் பௌத்தும் மாறுபடும்.  சேனாதிபதி  சேனையின் தலைவர் – இன்றைய நாள்  மார்ஷலுக்கு இணை. 

சேனைக்குக் கீழே இருப்பது தளம் . தளத்தின் அதிகாரி தளபதி  .   ( இன்றைய நாள் ஜெனரலுக்கு சமம் .    ( கப்பற்படையில் இவர் கலபதி என்று அழைக்கப்படுவார்

 ஒரு தளத்தில் 

  • 3 யானைப்படைகள்  –     ஒவ்வொன்றும்  300-500 யானைகள் 
  • 3 குதிரைப்படை  –  ஒவ்வொன்றும் 500-1000 குதிரைகள் 
  • 6 காலாட்படை – ஒவ்வொன்றும்  2000-3000 காலாள் 
  • 2 தாள்படை – காலாட்படையும் குதிரைப்படையும் இணைந்து – ஒவ்வொன்றும் 1000–2000 காலாளும்  500-1000 குதிரைகளும்  – .
  • 2 மருத்துவரணி  – ஒவ்வொன்றும்  200–300 மருத்துவர்களும் மருந்துகளும் .
  • 1 அல்லது  2 ஊசிப்படை  – தாக்கும் படை 

 ஒவ்வொரு தளமும் 3 அணிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் 

ஒவ்வொரு அணியிலும் 

1 யானைப்படை + 1 குதிரைப் படை + 2 காலாட்படை + 1 தாள்படை இருப்பர். 


பக்கம் – 17