
போர்ப் படைகளின் அளவு :
ஒரு எண்ணிக்கை (ENTITY) = ஒரு தேர்ப்படை அல்லது ஒரு யானைப்படை அல்லது ஒரு குதிரைப்படை அல்லது ஒரு காலாட்படை
ஒரு பத்தி = ஒரு தேர்ப்படை + ஒரு யானைப்படை + 3 குதிரைப்படை + 5 காலாட்படை = 10 எண்ணிக்கை
ஒரு குல்மம் = 3 பத்தி = 30 எண்ணிக்கை
ஒரு காணம் = 3 குல்மம் = 90 எண்ணிக்கை
ஒரு பாகினி = 3 காணம் = 270 எண்ணிக்கை
ஒரு கிரிதலை = 3 பாகினி = 810 எண்ணிக்கை
ஒரு சாமு = 3 கிரிதலை = 2430 எண்ணிக்கை
ஒரு அக்ரோணி = 10 சாமு = 24300 எண்ணிக்கை
மகாபாரத்தில் அர்ஜூன் , அபிமன்யு இறந்த மறு நாள், 8 அக்ரோணி சேனையை அழித்ததாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால் 1,94,400 எண்ணிக்கையை அழித்தானா?

தமிழகத்தில், சேனை என்பது மிகப் பெரிய அமைப்பு. ஒரு நாட்டில் 1-3 சேனைகள் இருக்கும். சேனைகளின் எண்ணிக்கை தேவைகளைப் பொறுத்தும் அது இருக்கும் இடத்தைப் பௌத்தும் மாறுபடும். சேனாதிபதி சேனையின் தலைவர் – இன்றைய நாள் மார்ஷலுக்கு இணை.
சேனைக்குக் கீழே இருப்பது தளம் . தளத்தின் அதிகாரி தளபதி . ( இன்றைய நாள் ஜெனரலுக்கு சமம் . ( கப்பற்படையில் இவர் கலபதி என்று அழைக்கப்படுவார்)
ஒரு தளத்தில்
- 3 யானைப்படைகள் – ஒவ்வொன்றும் 300-500 யானைகள்
- 3 குதிரைப்படை – ஒவ்வொன்றும் 500-1000 குதிரைகள்
- 6 காலாட்படை – ஒவ்வொன்றும் 2000-3000 காலாள்
- 2 தாள்படை – காலாட்படையும் குதிரைப்படையும் இணைந்து – ஒவ்வொன்றும் 1000–2000 காலாளும் 500-1000 குதிரைகளும் – .
- 2 மருத்துவரணி – ஒவ்வொன்றும் 200–300 மருத்துவர்களும் மருந்துகளும் .
- 1 அல்லது 2 ஊசிப்படை – தாக்கும் படை
ஒவ்வொரு தளமும் 3 அணிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்
ஒவ்வொரு அணியிலும்
1 யானைப்படை + 1 குதிரைப் படை + 2 காலாட்படை + 1 தாள்படை இருப்பர்.
பக்கம் – 17