எங்க பூமி

image


இது தான் இங்கிருந்து புறப்படும் கடைசி விமானம். ஒருத்தரைக்கூட விட்டுவிடக் கூடாது என்பது தீர்மானமான உத்தரவு.

“ஒரு நிமிடம் எங்க பாப்பாக்கு உயிருக்கு உயிரா இருந்த எங்க நாய்க்குட்டி…எங்க பூமி.. . அதைக் கடைசியா ஒருமுறை பாத்துடறோம்.”

“ம்..ம்..சீக்கிரம்.!”

“பாப்பா! அங்க பாரு நம்ம பூமி..!  வா வா என்று உன்னைக் கூப்பிடுது !”

அப்போது. மரங்கள் எல்லாம் எரிவது போல ஒரு ‘ஹோ’ என்ற சத்தம் விமானத்திற்கு மறுபுறம் கேட்டது. அனைவரும் ஜன்னல் வழியாகப்பார்த்தார்கள். நெருப்பு ஆறு போல தூரத்தில் வருவது தெரிந்தது.

“கதவைச் சாத்துங்கள்” விமானம் புறப்படட்டும். என்ற சத்தம்கேட்டது. விமானம் புறப்படும் போது தான் .. “ஐயோ! எங்க பாப்பாவைக் காணோம்”

“அந்தக் குழந்தை தப்பித்து விட்டது. நாம் நெருப்பைப்
பார்க்கும் போது அது இறங்கி ஓடிவிட்டது. இப்போது என்ன செய்வது?”

“ஒரு உயிர் கூட இங்கு இருக்கக் கூடாது என்பது
உத்தரவாயிற்றே!”

“நமக்கு நேரமில்லை. கிளம்ப வேண்டியது தான்.”  

அதற்குள் நெருப்பு விமானத்தைச் சூழ்ந்து கொண்டது.
விமானத்தால் நகர முடியவில்லை. ஒரு சில நிமிடங்களில் அந்த விமானம் முழுதும் எரிந்து
சாம்பலாயிற்று. அதிலிருந்த அனைவரும்
அழிந்தே போயினர்.

“பூமி” என்று ஓடிப்போய் அதைக் கட்டிக் கொள்கிறாள். அருகில்
ஒரு சிறுவன்.

“நீ யார்?”

“நானும் உன்னை மாதிரித் தப்பி வந்தவன். பூமியைப் பார்த்து இங்கு
வந்தேன். இதோ பார் ஒரு சுரங்கப் பாதை. வா! நாம் மூவரும் செல்வோம்!”

சென்றார்கள்.

செயற்கைக் கிரகத்திலிருந்த விஞ்ஞானிகள் விமானம் எரியும்
காட்சியைத்    திரையில்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் கைகளைத் தட்டி ஆரவாரித்தனர்.

“கடைசி விமானமும் அழிந்து விட்டது. மனித வர்க்கத்தை
முழுவதுமாக அழித்துவிட்டோம். மனிதர்களைக் காப்பாற்ற செவ்வாய் கிரகம் எத்தனையோ
விமானங்களை அனுப்பியது. நாம் அவை அனைத்தையும் விண்வெளியில் அழித்தோம். இந்த
விமானத்தை அந்த நெருப்பு ஆறே அழித்துவிட்டது. இனி அந்த பூமியில் மனித வர்க்கமே
இல்லை. இன்னும் சற்று நேரத்தில் அந்த பூமி கிரகத்தை சூரிய வெப்பத்தில் இணைய
வைக்கப் போகிறோம். மனித வர்க்கம் முழுமையாக அழியப் போகிறது.  அதனையும் நாம் காணப் போகிறோம்.

அனைவரும் மறுபடி ஆரவாரித்தனர்.

“ஆ. இதென்ன? நெருப்பு ஆறு. இது பூமிக்குச்
சொந்தமானதல்லவா? இங்கு எப்படி வந்தது?. ஒளி மூலம் இங்கு வந்துவிட்டதா? அப்படியானால்
வெடித்துச் சிதறப் போவது பூமி கிரகம் இல்லையா? நமது கிரகமா?”

வெடித்து சூரிய வெப்பத்தில் இணைந்தது அந்த செயற்கைக்கிரகம்.

image

பூமி வெகு வேகமாக  சுற்றிச் சுற்றி ஓடி ஒரு பள்ளத்தில் விழுந்தது.
. அதைத் தொடந்து வந்த அந்த சிறுவனும் சிறுமியும் அதில் சறுக்கிக் கொண்டே
விழுந்தனர். எவ்வளவு காலம் சறுக்கினார்களோ தெரியவில்லை. தாமரை மலர் போன்ற இருக்கையில்
கண்ணை மூடி அமர்ந்திருப்பவர் மடியில் பூமி விழுந்து மறைந்தது. அவர் கண்ணைத்
திறந்து பார்த்தார். பிறகு அமைதியாகக் கூறினார்.  

“ வாருங்கள்! புதிய உலகம் படைப்போம். நீ ஆதி.. அவன் பகவன்
என்றார்.  

பக்கம் –  5