
(இக் கவிதையில் வரும் ஒவ்வொரு வரியிலும் ஒரு கேள்வி புதைந்திருக்கும். அவ்வரியின் கடைசி வார்த்தை எதிரொலியாக வரும்போது அக்கேள்விக்கு விடை கிடைக்கும்)
எதிரொலி
என்றுமணங் கொள்வேனோ நான் கண்ட மாதை தை
என்செய்தா லுவகையுமே கொள்வாளோ பூவை பூ வை
என்னென்ன கொடுத்தாலே முகிழ்த்திடுவாள் மென்னகை நகை
என்னிடத்து யாதிருந்தால் மகிழ்ந்திடுவாள் என்செல்வம் செல்வம்
நன்மைதனி லென்செய்தால் சுவைத்திடுமோ இல்லறம் அறம்
இன்பமொடு வாழ்ந்திடவே விடவேண்டுமெம் மாசை ஆசை
மனமகிழ்வு காட்டிடவே என்செய்தல் பண்பாடு பண் பாடு
துன்பத்தைக் கொடுப்பதுவும் வாழ்வுதன்னெப் பிரிவு பிரிவு
எப்படிநான் வாழ்ந்தாலே இருந்திடுவாள் மனமொத்து ஒத்து
எப்பதவி கிடைத்தாலே மலர்ந்திடுவாள் மடந்தாய் தாய்
எப்படிதா னுறைந்தாலே புகழடைவள் குணக்குன்று குணக் குன்று
என்னிருப்பின் சுகமன்றி வேறில்லை நன்னெறியே நெறியே
பக்கம் – 24