
முதலாமவன் :
இதென்ன நியாயம் சார் எங்கள் ஸ்டேஷனரி ஸ்டோர்சில் ஒரு பாக்கெட் பென்சில் ஷார்ட்டேஜாப் போச்சு. என்னிடமிருந்து முப்பது ரூபாய் பிடுங்கிட்டாங்க!
இரண்டாமவன்:
உங்க பாடு தேவலையே! என் செக்க்ஷனில் ஒரு பாக்கெட் ஷார்ட்டேஜாப் போச்சு.. என்னை சஸ்பென்டே பண்ணிட்டாங்க!
முதலாமவன் :
அடப்பாவமே! நீங்க என்ன வேலை சார் பாக்கறீங்க?
இரண்டாமவன்:
நான் பேங்கிலே கேஷியரா வேலை பாக்கிறேன்!

கடவுள்:
பக்தா ! என்னதான் நீ ஊழல் பல செய்திருந்தாலும் உன் பக்தியை மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்!
அரசியல்வாதி:
தலைக்கு ஒரு லட்சம் கொடுத்தாலும் சரி ! தேவர்களையெல்லாம் நம்ம கட்சிபக்கம் இழுத்து தேவலோக ஆட்சி கட்டிலிலே என்னை அமர்த்தி விடுங்க ஸ்வாமி! அப்பறம் நீங்க என்ன வரம் கேட்டாலும் நான் கொடுக்கிறேன்!
பக்கம் – 23