சொல்வனம் . ஓர் q அழகிய சிற்றிதழ் ! மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் !
இதுவரை 127 இதழ்கள் வந்துள்ளன.
அவர்கள் குறிக்கோள்:
கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!
படிக்க ருசிக்க இந்த இணைய தளத்துக்குச் செல்லவும்

சொல்வனத்தின் ஆசிரியர்களில் ஒருவரான ரவிசங்கர் அவர்களை ‘விருட்சம்’ இலக்கியக் கூட்டத்தில் உரையாடக் கேட்டோம். அவர் நடத்திய ‘பிரக்ஞை’ என்ற பத்திரிகையைப் பற்றி விவரமாகக் கூறினார். சொல்வனத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது உலகின் பல இடங்களிலிருந்து பலதரப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு மாத இருமுறை இதழாக வெளியிடுகிறோம் என்றார்.
அரசியல் என்ற தலைப்பில் ஈராக்கில் ஜனநாயகம், பங்களாதேஷ் பயணம் , சிங்கப்பூர் லீ குவான் இயூ , குகை ஓவியங்கள், ஜப்பானில் இந்திய வணிகம் உலக வர்த்தக மாநாடு என்று எழுதுகிறார்கள்.
அறிவியல் என்ற தலைப்பில் மாயத் தோற்ற ஊக்கிகள், நோலாவின் இண்டர்ஸ்டெல்லார், இரு சுருள் வளைய சர்ச்சை, இயற்கை விவசாயம், தூரயியங்கி,(டிரோன்கள் ),வீடியோ விளையாட்டுக்கள், ஆதி மானுட யோக முறைகள், எபோலா, ஆயிரம் வருடங்கள் உயிர் வாழ்வது எப்படி என்று பல கோணத்தில் எழுதுகிறார்கள்.
இசை என்ற பகுதியில் இளையராஜாவின் ஷாமிதாப், டிசம்பர் சீசன் , ரஹ்மானின் திறமை, மன்னா டே,மாண்டலின் ஸ்ரீநிவாஸ், எஸ்.ஜானகியின் பத்மபூஷண் , இசை இல்லா இசை , கர்ணன் திரைப்படம், திமிறி நாயனம், காருக்குறிச்சி என்றெல்லாம் இசை மழை பொழிகிறார்கள்.
இலக்கியம் பகுதியில் அருமையான சிறுகதைகள்,கவிதைகள் கிடாவெட்டு, ஸ்வப்னா வாசவத்தம், ஜெயகாந்தனுக்கு அஞ்சலி, காகங்கள் சுட்ட வடைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கம்ப ராமாயணம் சித்திரங்கள், எஸ்.பொ , நாஞ்சில் நாதன் கவிதைகள், என்று எண்ணற்றவை
சமூகம் என்ற வலையில் புத்தக விமர்சனம், ஆண்-பெண் சிக்னல், பொறியியல் கல்விக்கு அப்பால், தஞ்சை விவசாயிகளின் சோகம், கூவம்- தாது வருஷப் பஞ்சத்தைப் போக்க வெட்டிய ஆறு, ஆபாச விளையாட்டு, செயற்கைக் கருவூட்டல் ,ஊழல் ஒழிப்பு என்று பல முகங்கள்.
சுருக்கமாகச் சொன்னால்
சொல்வனம் ஒரு – விளம்பரப் பத்திரிகை அல்ல.விவரப் பத்திரிகை அல்ல.
விளக்கப் பத்திரிகை ! .
கருத்துப் பெட்டகம். !!
பக்கம் – 19