
ஆறு காசு எண்ணை வாங்கி ஏலாலம்பர ஏலு – நான்
அதிரசம் சுட்டுவைச்சேன்
ஏலாலம்பர ஏலு
மாமியாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மயிரப் பிடிச் சண்டை செய்வ
ஏலாலம்பர ஏலு
மூத்தாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மூக்கறுத்து நாயங் கேப்ப
ஏலாலம்பர ஏலு
மச்சினன் தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மண்டை ஓடச்சி சந்தா செய்வ
ஏலாலம்பர ஏலு
நாத்தனாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
ஓதட்ட அறுத்து நயம் கேட்ப
ஏலாலம்பர ஏலு
மாமனாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மண்டை ஓடைச்சி சந்தா செய்வ
ஏலாலம்பர ஏலு
ஆம்படையான் தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
ஆளும் பொருத்தாச்சே
ஏலாலம்பர ஏலு
(வல்லியம்மாள் பாடியது )
பக்கம் – 11