
தில்லானா மோகனாம்பாள் -வாஷிங்டனில் திருமணம் ,துப்பறியும் சாம்பு கதைகளுக்கு உருவம் கொடுத்து உயிரைக் கொடுத்தவர் கோபுலு அவர்கள். ஏப்ரல் 30ந் தேதி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.
தில்லானா மோகனாம்பாள்:

துப்பறியும் சாம்பு:

வாஷிங்டனில் திருமணம்:

விளக்கெண்ணை குடிக்க வைக்கும் காட்சி:


ஸ்டேஷனில் ரயில் வருமுன் பிளாட்பாரக் காட்சி!

தஞ்சையில் பிறந்து தஞ்சை கலாசாரத்தில் திளைத்தவர். ஆனந்த விகடனின் சிறந்த கார்ட்டூனிஸ்ட்டான மாலி அவர்களின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு விகடனில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். . கதைகள், கார்ட்டூன், துணுக்கு, சிரிப்பு இவற்றிற்கெல்லாம் அவர் வரைந்தது அவரின் தனித் தன்மையைப் படம் பிடித்துக் காட்டியது.
கலைமாமணி பட்டம் பெற்றவர்.
சித்ர கலாரத்னா விருது, எம் ஏ சிதம்பரம் செட்டியார் பரிசு, முரசொலி பரிசு என்று பல விருதுகளைப் பெற்றவர். அதற்குத் தகுதியானவரும் கூட.
கோபுலு அவர்களின் சிறப்புக்களைப் பாராட்ட ஒரு அழகான கூட்டம், ஓவியர்கள் மணியம் செல்வன், நாகராஜன், மாருதி, ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர் மாலன், ஜீவ சுந்தரி ( பெண் இனி பத்திரிகை ஆசிரியர் ),சுபாஷினி பங்குபெற திருவான்மியூர் பனுவல் புத்தகாலயத்தில் நடைபெற்றது. அதில் கேட்ட முத்துக்கள்:
– கோபுலு இரண்டு கையாலும் படம் வரைவாராம். அதுவும் ஸ்ட்ரோக் வந்து வலது கை முடியாமல் போன போது இடது கையால் வரைந்தாராம்.(ஸ்ட்ரோக் போடும் எனக்கே ஸ்ட்ரோக்கா? )
– சாவி -கோபுலு கூட்டணி ,( இங்கே போயிருக்கிறீர்களா?) ஜெயகாந்தன் – கோபுலு கூட்டணி (பாரிசுக்குப் போ , சில நேரங்களில் சில மனிதர்கள்,) கலக்கியதாம்.
– 20,000 க்கும் மேற்பட்ட ஜோக்குகளுக்குப் படம் வரைந்திருக்கிறாம்.
அழும் உலகத்திற்குச் சிரிப்பைப் பரிசாகத் தருவது தான் அவரது சித்தாந்தம்
அவரது குடும்பத்திற்கு குவிகத்தின் அஞ்சலி!!
.
பக்கம் – 4