
படம் : நன்றி ; NDTV
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ,சுதாகரன்,இளவரசி உட்பட நால்வரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நீதிபதி குன்ஃகா வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இருந்தபோதும் இதே வழக்கில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கி உள்ளது.
அ.இ.அ. திமுகவின் தொண்டர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி, பட்டாஸ் கொளுத்தி உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
செல்வி ஜெயலலிதா:
இந்தத் தீர்ப்பு மனநிறைவை தருகிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறைத் துடைத்த தீர்ப்பு. அரசியல் எதிரிகள் என் மீது சுமத்திய பழியை துடைத்திட்ட தீர்ப்பு. நான் எந்தத் தவறும் செய்யாதவர் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது
தமிழிசை சௌந்தரராஜன் (பி.ஜே.பி )
நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். இந்தத் தீர்ப்பை மதிக்கிறோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். தீர்ப்பை தீர்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். தீர்ப்பை அரசியலாக்கக் கூடாது
சுப்பிரமணியசாமி “அதிர்ச்சி”! மேல்முறையீடு செய்யப்போவதாகத் தகவல்! .
“இது இறுதித்தீர்ப்பல்ல”-கருணாநிதி
இது ஜனநாயகத்துக்கும் நீதிக்கும் கிடைத்த இழப்பு! – பா.மு.க. ராமதாஸ்
நீதிபதி குமாரசாமியின் கணக்கில் தவறு இருக்கிறது. அதனால் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று பப்ளிக் பிராசிக்யூடர் ஆச்சார்யா கூறினார்.
கர்நாடக அரசு, தீர்ப்பின் முழு விவரங்களையும் சட்ட நுணுக்கங்களையும் பரிசீலினை செய்த பிறகு மேல்முறையீட்டைப் பற்றித் தீர்மானிக்கப் படும் என்று கூறுகிறது.
மே 10 அன்னை தினம் மே 11 அம்மா தினம் – அது மட்டுமல்ல MUMMY RETURNS – நெட்டில் சுட்டது!
பக்கம் – 7