
குவிகம் இலக்கிய வாசலின் இரண்டாவது நிகழ்ச்சி இம்மாதம் 23 ஆம் தேதி. சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு
"நான் ரசித்த தி. ஜானகிராமன்"
என்னும் தலைப்பில் கலந்துரையாடலாக நடைபெறவிருக்கிறது.

இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் சென்னை 600041 (திருவான்மியூர் சிக்னல் – திருவான்மியூர் பேருந்து நிலையம் வழியில் BOMBAY DYEING SHOW ROOM அருகில் )
நிகழ்ச்சி கலந்துரையாடலாக வடிவமைக்கப்படுவதால், விருப்பமுள்ளவர்கள் தாங்கள் ரசித்த ஒரு படைப்பைப் பற்றி ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளலாம்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வசதியாக, பேசவிருக்கும் படைப்பின் தலைப்பை (மூன்று தலைப்புகள் குறிப்பிடவும்) மின்னஞ்சல் மூலம் முன்பாகவே தெரிவிக்கவும்,
பலர் ஒரே ரசிப்பைப் பற்றிப் பேசுவதைத் தவிiர்க்கவே இந்த முன்னேற்பாடு.!
தங்களுக்கு அளிக்கப்படும் தலைப்பு முன்னதாகவே தெரிவிக்கப்படும்.
தங்கள் இலக்கிய நண்பர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அன்புடன் சுந்தரராஜன் – கிருபானந்தன்
– குவிகம் இலக்கிய வாசல்
மினனஞ்சல் : ilakkiyavaasal@gmail.com
பக்கம் – 2