
சிறப்பு நன்றி: Leen Thobias Powered by www.p4panorama.com © attukaldevi.com 2007 – 2015 Powered by Nakshathra Design
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆட்டுக்கால் பகவதி அம்மன். கேட்கும் வரத்தைத் தருபவள்.
திருவனந்தபுரத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் இந்த அம்மனைத் தரிசிக்க இந்தியாவின் எல்லா பாகங்களிலும் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள். .
தமிழக மற்றும் கேரளாவின் பாரம்பரியங்கள் இணைந்திருக்கும் கோவில் இது. .
கண்ணகி தான் இந்தக் கோவிலின் மூல நாயகி.
கண்ணகி கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்து கொடுங்களூர் சென்று வானுலகம் அடையுமுன் வந்த இடம் தான் ஆட்டுக்கால் பகவதி என்ற ஐதீகம் உண்டு.
பிப்ரவரி மாதம் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வருகின்றனர். காலையில் தலைமைப் பூசாரி மூல அடுப்பைப் பற்ற வைத்ததும் அந்த நெருப்பு பொங்கல் வைக்கத் தயாராயிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும். வந்திருக்கும் லட்சோப லட்சம் மக்களும் மாலைக்குள் பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைத்து பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டாடுகின்றனர்.
10 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படுகிறது.
இத்தனை பெண்கள் குவிந்து வழிபாடு செய்வதில் இந்த ஆட்டுக்கால் பகவதி உலக சாதனையை ஏற்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.