
நானும் என் நண்பர்களும் டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்த ஸ்டான்ட் -அப் காமெடி ஷோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். உடன் என் நண்பரின் ஐந்து வயது மகன் ரமேஷும் இருந்தான்.
சிறிது நேரம் ஷோவைப் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் , “டாடி, டி.வி.யில அந்த அங்கிள் நின்று கொண்டே ஜோக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை
ஸ்டான்ட் -அப் காமெடி என்று சொல்கிறீங்க . அவர் அதையே உட்கார்ந்து கொண்டு சொன்னால் ஸிட் -டவுன் காமெடின்னு சொல்வீங்களா ” என்றானே பார்க்கலாம்.
அங்கு எழுந்த சிரிப்பலையும் ,திகைப்பலையும்,விழிப்பலையும் அடங்க வெகு நேரமாயிற்று.
– சிவமால் .
குட்டீஸ்க்காகப் பாட்டு எழுதியவர் அழ. வள்ளியப்பா அவர்கள். இன்றைய தமிழ் நாட்டுப் பெரிசுகள் எல்லாம் அவருடைய பாடல்களைப் பள்ளியில் படித்த பெரிய மனிதர்கள் தான்.
சிறுவர்கள் மனதைக் குதூகலிக்கச் செய்து பாடவும், ஆடவும் செய்த கவிஞர் அழ.வள்ளியப்பா, “குழந்தைக் கவிஞர்” என்ற அடைமொழிக்கு உரியவர்.
அவர் மிகவும் ஈடுபாடு கொண்டு நடத்திய மாத இதழ் “பூஞ்சோலை”.
அவரது புத்தகங்கள்:
- பாடல்கள் தொகுதி 11
- கதைகள் 12
- கட்டுரை நூல்கள் 9
- நாடகம் 1
- ஆய்வு நூல் 1
- மொழிபெயர்ப்பு 2
- தொகுப்பு நூல் 1
ஆக, 37 நூல்கள் எழுதியிருக்கிறார்.
கைவீசம்மா கைவீசு பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக சிவாஜி கணேசனின் பாசமலர் உதவியது. (அந்த வீடியோவை இந்தக் குவிகத்தில் பார்க்கலாம் )
அவருடைய இரண்டுபாடல்களை வார்த்தை வடிவில்
தந்திருக்கிறோம்
திருவிழாவாம் திருவிழா பாட லை ஒலி வடிவிலும்
தந்திருக்கிறோம்
.
படித்து, கேட்டு, மகிழுங்கள்:

