
கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் , எப்படி இருக்கக்கூடாது
என்பதற்கு பட்டிமன்ற நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட ஒரு சுவையான உதாரணம் :-
கற்பனையான
சம்பவம் : “குடும்பத்தலைவர் மாலையில் அலுவலகத்தில் இருந்து வீடு
திரும்புகிறார். வழியில் இருந்த கண்ணாடி பாத்திரம் அவர் கால்பட்டு உடைந்து
விடுகிறது”
(1)அதம வகை,(இருவருமே
விட்டுக்கொடுப்பதில்லை):
கணவன்:“உனக்கு அறிவிருக்கிறதா? கண்ணாடி பாத்திரத்தை
வழியில் வைத்திருக்கிறாயே.”
மனைவி:“நீங்க
பாத்து வரவேண்டியதுதானே. கண்ணு என்ன அவிஞ்ஜா போச்சி.”
(2)மத்திம வகை.( யாராவது
ஒருவர் விட்டுக்கொடுப்பது).
கணவன்:“கண்ணாடி பாத்திரத்தை வழியிலா வைப்பது,முட்டாள்,
மனைவி
:” தவறுதான், மன்னித்துவிடுங்கள்.
(அல்லது)
மனைவி
:“ஏங்க பாத்து வரக்கூடாது ?
கணவன்:"தவறு
செய்து விட்டேன் . மன்னித்துவிடு.”
(3)உத்தம வகை-(இருவரும்
விட்டுக்கொடுப்பது)
கணவன்:“அடாடா. நான் பார்த்து வந்திருந்தால் இந்த
தவறு நடந்திருக்காதே.”
மனைவி
:“தவறு என்னுடையததுதான். கண்ணாடி பாத்திரத்தை வழியில் வைத்திருக்க கூடாது,”
ஆனால் பாருங்கள் , இந்த மூன்று வகையிலும்
என் குடும்பம் வரவில்லை , நான்
விட்டுக்கொடுத்தாலும், என்
மனைவி விடமாட்டாள். உதாரணமாக இந்த காட்சியையே எடுத்துக்கொள்வோம்.
நான்:“அடாடா, நான் பார்த்து
வந்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காதே.”
மனைவி :“நீங்க என்னிக்கிதான் பார்த்து வந்தீங்க, உங்களுக்கு தான் கடவுள்
கண்ண பிடரியல வச்சுட்டானே.”

கணவன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க… தெரியுமா?“
மனைவி – “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“
மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“
கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே….!“
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க…. பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“
கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“
மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“
.
கணவன் – “இதோபாரு…. நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“
மனைவி – “சரிங்க…. இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“
.
கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்…?“
கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்…..
கணவன் – “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“
மனைவி – “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“