
எங்கே போகிறோம்?
இந்திய எழுத்தாளர்கள் 23 பேர் தங்கள் சாகித்ய அகாதமி விருதுகளைத் தேவையில்லை என்று திரும்ப அளிக்கும் நிகழ்ச்சி தற்சமயம் நிகழ்ந்து கொண்டு வருகிறது. மேலும் பதினைந்து எழுத்தாளர்கள் திருப்பித் தரத் தயாராயிருக்கிறார்கள் என்றும் சொல்லப் படுகிறது.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் :
சாகித்ய விருது பெற்ற கல்பர்கி என்ற எழுத்தாளரைக் கொன்ற போது அகாதமி மவுனம் சாதித்தது. மேலும் அனந்தமூர்த்தி , பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்களைத் தாக்கிய போதும் அகாதமி அமைதியாகவே இருந்தது. மதத்தின் பெயரால் பேச்சுரிமை – எழுத்துரிமை நசுக்கப்படுகிறது. அதற்கும்
அகாதமி
கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது. அகாதமியா ? அரசு இயந்திரமா?
இன்னும் நமது வேற்றுமையில் ஒற்றுமையை குலைக்கும் செய்திகள்:
ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக ஃபட்வா இட்டிருக்கிறார்கள். அவர் ஈரான் தயாரித்த ‘முகம்மது’ என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறாராம்.
சிலர் பசுக்களைத் தெய்வமாகப் பார்க்கிறார்கள். சிலர் அதைச் சாப்பிடுவதைத் தங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பசு வதை தடை செய்யப் படுகிறது. பசுக்களை சாப்பிடுபவர்கள் கொல்லப்படுகிறார்கள். அதைக் கண்டித்து மற்றவர் பசு மாமிசம் உண்ணும் விழா நடத்துகிறார்கள்.
அரசியல்வாதிகளும் பதவி விரும்பிகளும் தங்களுக்குப் பிடித்த அந்த ‘சிலரை’ ஆதரித்து மற்றவரை எதிர்த்து அறிக்கை விட்டு எரியும் நெருப்பில் எண்ணை விட்டுக் குளிர் காய்கிறார்கள்.
நாம் எங்கே போகிறோம்?
மதம் என்ற இரும்புச் சங்கிலியை எடுத்துவிட்டு மனிதம் என்ற அன்புச் சங்கிலியில் இணைவோம்!
வெறுப்பு என்ற களையைக் களைந்துவிட்டு நட்பு என்ற பயிரை வளர்ப்போம்!
எழுத்தாளர்களும், ஊடகங்களும் இவற்றைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.
நமது நாடு முன்னேற அது தான் ஒரே வழி!
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா
page