வாட்ஸ் அப் about வாட்ஸ் அப்

கோயமுத்தூர் கவுண்டம்பாளயத்தில்  புதிதாகக் கல்யாணம் ஆன 20 வயதுப்  பெண் ஒருத்தி கணவன்  வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ் புக் பார்க்கத் தடை விதித்ததால் தூக்குப்போட்டுக் கொண்டு  இறந்து விட்டதாக TIMES OF  INDIA தெரிவிக்கிறது. 

Scolded for too much WhatsApp, Facebook, woman commits suicidePTI | Oct 13, 2015, 06.36 PM IST


என்ன கொடுமை இது? 

மக்கள் இந்தப் போதைக்கு அடிமை ஆகிவிட்டார்கள். 

image

மேலும் whatsup இல் பொய்யான தகவல்கள் நிறைய வருகின்றன. 

இதை ஷேர் செய்யுங்கள் என்று எண்ணற்ற தகவல்கள். மற்றவர்கள் நம் வீட்டில் போடும் குப்பைகளை நாம் சந்தோஷமாக நமது நண்பர்கள் வீட்டுக்குத் தள்ளுகிறோம். 

மோடி ஏன் உலகம் சுற்றுகிறார்? 

ஆயிரம் கீரைகளும் அதற்கான மருந்து குணங்களும் 

இந்தக் குழந்தை தெருவில் கிடந்தது 

சூரியன் எப்போது பச்சைநிறமாக இருக்கிறது ?

சாணி தெளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் 

இதை ஷேர் செய்தால் 37 நிமிஷத்தில்  பணம் வரும்

இதை அனுப்பினால் 19 ரூபாய்க்கு டாக் டைம்   கிடைக்கும்

இப்படி எத்தனையோ கற்பனைச்  செய்திகளை உண்மையைப் போல் – ஆராய்ச்சி செய்து எழுதுவது போல் எழுதும்  கும்பல் நிறைய வந்துவிட்டது.

இதற்கு ஒரு மாற்று வரவேண்டும்! வரும்!!