அமரர் வெங்கட் சாமிநாதன்

image


நான் வெங்கட் சாமினாதன். வெசா என்று அழைப்பார்கள் என்னை. விமரிசனாகவும் அறியப்படுகிறேன்.

கடந்த 40 வருடங்களாக தமிழ் நாட்டின் கலை மற்றும் இலக்கிய நடப்புகளைப் பற்றி மனதுக்குப் பட்டதை கஷ்ட நஷ்டங்களைப் பற்றி நினைப்பின்றி எழுதி வந்திருக்கிறேன். ஈஸ்வரோ ரக்ஷது.

ஆனால் ஈஸ்வரனும் ரக்ஷித்ததாகத் தெரியவில்லை. நான் நானாகத்தானே இருக்க முடியும்!

அன்புடன்,
வெசா

 இப்படித் துவங்குகிறது  அவருடைய பிளாக் (BLOG ) 

 http://www.vesaamusings.blogspot.com/


இவரைப்பற்றிச் சிலர்: 

என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும்
அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின்
அபிப்ராயங்களை மதிக்கிறேன். – க.நா.சு

சாமிநாதனது பேனா வரிகள் “புலிக்கு
தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது” என்றபடி சகலத்தையும் பதம்
பார்க்கும் – சி. சு. செல்லப்பா

தமிழ் கலைத் துறைகள் மீது வெ.சா
கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு, வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு
தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட
முடியும். – சுந்தர ராமசாமி

எந்த மேல் நாட்டு விமரிசன பாணியையும்
கைக் கொள்ளாமல் தன் சுவைக்கு உட்பட்டதை, படைப்பின்
கலாச்சாரப் பின்ணணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது
விமரிசனம் – கோமல் சுவாமிநாதன்.

, “வெங்கட் சாமிநாதன்: தமிழ் இலக்கியவெளியில் ஒரு காட்டுக் குதிரை” என்ற கட்டுரையில் திருமாவளவன், “வெங்கட் சாமிநாதனுக்கு முன் “விமர்சனமரபு” என்று சொல்லும்படியான ஒன்று இருந்ததா என்பது இன்றைய வாசகன் எதிர்கொள்ள வேண்டிய முதற் கேள்வி,


வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்தவர் 

வெங்கட் சாமிநாதன் ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம்,
திரைப்படம், நாட்டார் கலைபோன்ற பல்வேறு துறைகளிலும்
ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர்.  நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும்
முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம்,
நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை வலியுறுத்தியவர்.

மார்க்ஸீய எழுத்தாளர்களும் , திராவிட எழுத்தாளர்களும் தமிழ் எழுத்துலகை ஆக்கிரமித்துக் கொண்ட போது , அவர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஒரே குரல் இவருடையது தான். அதற்காக இவர் CIA ஏஜண்ட் என்றும் , முதலாளித்துவத்தின் கைக்கூலி என்றும் திட்டப்பட்டவர். 


இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற
திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு
மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அவருடைய புத்தகங்களான கலை அனுபவம் , வெளிப்பாடு இரண்டும் விமரிசனத்துக்கு விளக்கம் கூறும் அனுபவங்கள். 

 கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம்
வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல்விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.


அவரது வெளியீடுகள்:


இலக்கிய விமர்சனம்: (கட்டுரைத் தொகுப்புகள்)

1. பாலையும் வாழையும்: அன்னம் பதிப்பகம், (1976)
2. எதிர்ப்புக் குரல், அன்னம் பதிப்பகம்(1978)
3, என் பார்வையில், அன்னம் பதிப்பகம் (1982)
4. என் பார்வையில் சில கவிதைகள்: கலைஞன் பதிப்பகம் (2000)
5. என் பார்வையில் சில கதைகள், நாவல்கள்: கலைஞ்ன் பதிப்பகம்(2000)
6. சில இலக்கிய ஆளுமைகள்: காவ்யா பதிப்பகம் (2001)
7. பான்ஸாய் மனிதன்: கவிதா பதிப்பகம், (2001)
8. இச்சூழலில்: மதி நிலையம் (2001)
9. விவாதங்கள், சர்ச்சைகள்: அமுத சுரபி பிரசுரம்(2003)
10, ஜன்னல் வழியே: சந்தியா பதிப்பகம் (2005)
11. புதுசும் கொஞ்சம் பழசுமாக: கிழக்கு பதிப்பகம்(2005)
12. யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை: எனி இந்தியன் பிரசுரம் (2006)
13. க்டல் கடந்து: விருட்சம் பிரசுரம்: (2006)
14. இன்னும் சில ஆளுமைகள்; எனி இந்தியன் பிரசுரம் (2006)

நாடக விமர்சனம்:

15. அன்றைய வரட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை: அன்னம்
பதிப்பகம், (1985)
16. பாவைக் கூத்து அன்னம் பதிப்பகம்.(1986)
17. இன்றைய நாடக முயற்சிகள்: தமிழினி பிரசுரம்(2004)

திரைப்படம்

18. அக்கிரகாரத்தில் கழுதை {திரைப்பட பிரதி} (இரண்டாம் பதிப்பு: காவ்யா
பதிப்பகம்(1997)
19. திரை உலகில் (திரை விமர்சனங்கள்) காவ்யா பிரசுரம்(2003)

கலை விமர்சனம்

20. கலைவெளிப்பயணங்கள்: அன்னம் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு (2003)
21. கலை உலகில் ஒரு சஞ்சாரம்: சந்தியா பதிப்பகம்(2004)
22. சில கலை ஆளுமைகள், படைப்புகள்: சந்தியா பதிப்பகம் (2004)

தொகுப்புகள்

23. தேர்ந்தெடுத்த பிச்சமூர்த்தி கதைகள்: சாகித்ய அகாடமி (2000)
24. பிச்சமூர்த்தி னைவாக: மதிலையம்(2000)
25. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் ஒன்று, : சந்தியா பதிப்பகம்(2005)
26. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் இரண்டு: சந்தியா பதிப்பகம்(2005)

மொழி பெயர்ப்புகள்

27. A Movement for Literature: Ka.Naa.Subramaniam: சாகித்ய அகாடமி(1990)
28. தமஸ்: (நாவல்: ஹ’ந்தி மூலம்: பீஷ்ம சாஹ்னி) சாகித்ய அகாடமி(2004)
29. ஏழாம் முத்திரை: (Ingmaar Bergman’s filmscript); (தமிழில்) : தமிழினி, (2001)

வாழ்க்கை விமர்சன குறிப்புகள்

30. வியப்பூட்டும் ஆளுமைகள்: தமிழினி (2004).

உரையாடல்கள்:

31. உரையாடல்கள்: விருட்சம் வெளியீடு, (2004)

விருது:

டோரண்டோ பல்கலைக் கழகமும் கனடா இலக்கியத் தோட்டமும் இணைந்து அளிக்கும வாழ்நாள் சாதனைக் கான இயல் விருது 2003.


 வெங்கட் சாமிநாதன் 80 வயது பாராட்டு விழாவும் , வம்சி பதிப்பகம் வெளியிட்ட, வெங்கட் சாமிநாதன்  எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “சினிமா என்ற பெயரில்” நூல் வெளியீட்டு விழாவும் 2013  இல் நடைபெற்றது. இந்திரா பார்த்தசாரதி, வெளி ரங்கராஜன், கணையாழி ராஜேந்திரன், சச்சிதானந்தம், பாரதி மணி, சுகா, சீனு ராமசாமி, செங்கதிர், திலிப் குமார், க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோர்

நிகழ்விற்கு வந்திருந்து சிறப்பித்தவர்கள். 


அக்கிரகாரத்தில் கழுதை: 

image

ஒரு பார்ப்பனப் பேராசிரியர் ஓய்வுபெற்றுத் தன்கிராமத்திற்கு ஒரு கழுதைக் குட்டியோடு வருகிறார். அதனால் அவருக்கும் அக்கிரகாரத்துப் பார்ப்பனர்களுக்கும் இடையில் தகராறு வருகிறது. ஆனால் பேராசிரியர் வீட்டில் வேலைபார்க்கும் தலித்பெண் லட்சுமி கழுதை மீது மிகுந்த பிரியத்தோடு இருக்கிறாள். பேராசிரியர் ஊரில் இல்லாதபோது கழுதை கோயிலில் கட்டப்படுகிறது. இந்த இடைவெளியில் லட்சுமி யாராலோ ‘கெடுக்கப்பட்டு’ கர்ப்பமாகிறாள்.

லட்சுமியின் குழந்தை இறந்து பிறக்கிறது. அதற்குக் காரணம் கழுதைதான் என்று முடிவுகட்டிக் கழுதையைக் கொன்று விடுகின்றனர் . ஊர் திரும்பிய பேராசிரியர் சுடுகாடு சென்று கழுதையின் மண்டையோட்டை லட்சுமியிடம் கொடுக்கிறார். லட்சுமி ஒரு மரண நடனம் ஆடி அதை அங்கிருக்கும் தலித்துகளிடம் கொடுக்கிறாள். மண்டையோட்டில் தீ பற்றியெரிகிறது, அந்த தீ அக்கிரகாரத்திற்கும் பரவுகிறது.

நன்றி:

சொல்வனம்

விக்கிபீடியா 

வேசா மியூசிங்க்ஸ்