கல கல எண்ணங்கள் !!!

தலையில அடிச்சுக்கிறது ’ என்ற வழக்கு FACE -PALM என்று சில வருடங்களாக இண்டர்நெட்டில் புதியக் கண்டுபிடிப்பு போல வருகிறது . வெறுப்பையும் ஏமாற்றத்தையும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏளனத்தையும் விவரிக்கும் செயல் அது. அதற்கு ஒரு இமோடிகான் கொடுத்து சிறப்பித்திருக்கிறார்கள்.
அதுக்கு ஒரு குட்டி வடிவம் – அது இப்படி

என்ன தான் இருந்தாலும் கடைசிக் கடலை சொத்தைக் கடலை

நொங்கு தின்னவன் ஓடிப் போயிட்டான் நோண்டிக் கொடுத்தவன் மாட்டிக் கிட்டான்.

விடை :
அந்தப் படத்துக்கு விடை உங்க மனசில தோணினது தான்.

புது மொழிகள் ( தரும ராசேந்திரன்)
காற்றினிலே வரும் கரண்டு !
காற்று வீசும்போதே நமக்கு காற்றாலை கரண்ட் கிடைக்கும்
மின்விசிறியை போட்டு அந்த காற்றை உடனே வாங்கிக்கோ !
வைகை !
ஆன்றோர் நம் தலையில் கை வைத்தால் நம் மனம் திருந்தும் !
முடிதிருத்துபவர் நம் தலையில் கைவைத்தால் நம் தலை திருந்தும்!
பணி ஒய்வு !
ஒரு நாளைக்கு ஆயிரம் கையெழுத்துப் போட்ட அலுவலர்
இப்போது ஒரு நாளைக்கு ஆயிரம் ராமஜெயம் எழுதுகிறார் !
சமுதாயம் !
அவள் முயற்சியிலே நல்ல வேலை தேடிக்கொண்டபோது புகழ்ந்தார்கள் !
அவள் முயற்சியிலே நல்ல வாழ்க்கைத் துணை தேடிக்கொண்டபோது இகழ்ந்தார்கள் !
சோழன் !
சோழன் விரைவு ரயில் சிதம்பரத்தில் அரை மணி நேரம் நின்று சென்றது (இஞ்சின் பழுதால்) !
சோழன் ராஜராஜன் சிதம்பரனாரை தரிசிக்க ஏதுவாக நின்றதோ சோழன் விரைவு ரயில் !
மீடியா !
எங்கையா கைதுபண்ணின திருடனுகள எல்லாம் காணோம்?
மீடியாக்காரங்ளுக்கு பேட்டி குடுத்துக்கிட்டு இருக்காங்க ஐயா !
அடுத்த தலைமுறையில் நடக்கப் போகும் விஞ்ஞான அதிசயங்கள்:
சைக்கிளை மிதித்தால் மின்சாரம், கடல் அலையிலிருந்து, காற்றிலிருந்து, சூரிய ஒளியிலிருந்து மின்சாரம்
கடல் நீரை சுலபமாக குடி நீராய் மாற்றும் வசதி
மேகங்களில் தண்ணீரைச் சேமித்து வைத்து வேண்டும் போது மழை பெய்ய வைப்பது
பறக்கும் சைக்கிள் ,ஸ்கூட்டர்,கார் -அல்லது சிறிய விமானம் – ரோடு தேவையில்லை.
மனதுக்குள் பேசுவதை ரிகார்ட் செய்யும் கருவி
கனவுகளை ரிகார்ட் செய்யும் கருவி
மனிதன் சிறிய கருவிமூலம் பறவை போல பறப்பது
கடலில் ஏரியில் தண்ணீரின் மீது நடந்து செல்வது
ரிமோட்டில் சமைப்பது
பாலங்கள் தேவையில்லை
உடலில் எந்த பாகத்தையும் சுலபமாக மாற்றலாம்.
மூளையை கம்ப்யூட்டருடன் இணைத்து அதிலிருப்பதை ரிகார்ட் செய்வது. குற்றவாளிகளி டமிருந்து உண்மையைக் கண்டு பிடிப்பது
உணவுக்குப் பதிலாக செயற்கை உணவு – விவசாயம் தேவையில்லை