மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தமிழகத்தில், 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. முதல் இருபது நகரங்களில் சென்னையும் கோயம்புத்தூரும் இடம் பெற்றிருக்கின்றன.
சரி, ஸ்மார்ட் சிட்டி என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?
தேவையான தண்ணீர் வசதி, சரியான மின்சார விநியோகம், குப்பை மேலாண்மை, போக்குவரத்து வசதிகள், வீடு வசதிகள் (குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு) , தகவல் துறை தொடர்பு, கணிணி மயமாக்கல், நல்ல அரசமைப்பு, குடிமக்கள் பயன் பெறும் வகையில் இணைய தளம் மூலமாக அரசுப் பணிகள், நல்ல சுற்றுப்புறம், குடிமக்களுக்குக் குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்குப் பாதுகாப்பு , சுகாதாரம் மற்றும் படிப்பு வசதி.
இதற்காக மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு நகரத்துக்கும் 100 கோடி ரூபாய் வருடந்தோறும் வழங்கப்படும். மாநில அரசும் அதற்கு இணையான தொகையை வழங்க வேண்டும்.
சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்வு செய்து, அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மேம்பாட்டு பணிகளைச் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தி.நகரில் திட்டமிட்டுள்ள செயல்பாடுகள் :
ஒருங்கிணைந்த கட்டமைப்புப் பணிகள்
மோட்டார் வாகனமில்லா மிதிவண்டிப் பாதை, பாதசாரிகள் வளாகம்
மின்சேமிப்பு விளக்குகள், நவீன குடிநீர், கழிவுநீர் வடிகால் வசதிகள்
சாலை வடிவமைப்பு, நவீன சிக்னல்கள், பாதுகாப்பு அம்சங்கள்
பனகல் பூங்கா மேம்படுத்தல்
வாகன நிறுத்துமிட மேலாண்மை,
குப்பை அகற்றுவதில் நவீன முறையை கையாளுதல்
ஆகியவை இந்தத் திட்டத்தில் இடம் பெறும்.
மக்களுக்கு முக்கியமாகத் தேவை :
குப்பையில்லா சாலை / வீடு
மாசு இல்லா காற்று
நெரிசல் இல்லா போக்குவரத்து
நடக்கக் கூடிய நடைபாதைகள்
சரியான இடங்களில் மேம்பாலங்கள்
சாலையைக் கடக்கப் பாலங்கள்
ரயில் / பஸ் வசதி
சரியான ஆட்டோ
பஸ்களுக்குத் தனிப் பாதை
வண்டிகளுக்குத் தனித்தனித் தடங்கள்
ஒப்பனை அறைகள் –
குடி தண்ணீர்
மருத்துவம்
டாஸ்மாக் ஒழிப்பு
பள்ளிகள் / கல்லூரிகள்
உணவு விடுதிகள்
சுத்தமான ரயில் / பஸ் நிலையங்கள்
பொறுப்பான காவல் துறை
லஞ்சம் இல்லா அரசு அலுவலகங்கள்