இலக்கியவாசல் முதலாம் ஆண்டுவிழா அழைப்பிதழ்

நண்பர் கிருபானந்தனும் நானும் இணைந்து அமைத்த குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பு  நண்பர்களின் நல்லாதரவோடு  ஓராண்டைப் பூர்த்தி

செய்கிறது.

சென்ற வருடம் சித்திரைத் திங்களில் துவங்கிய இந்த வாசலுக்கு

 திருப்பூர்   கிருஷ்ணன், வா.வே.சு, ஜெயபாஸ்கரன், பிரபஞ்சன்,   பதின்மூன்று சிறுகதை ஆசிரியர்கள், நீரை அத்திப்பூ, சாரு நிவேதிதா, ஸ்ரீஜா வெங்கடேஷ், அசோகமித்திரன், அழகியசிங்கர், ரவி தமிழ்வாணன், பாம்பே கண்ணன், ஞாநி 

ஆகிய இலக்கிய வித்தகர்களுடன், மற்றும் பல இலக்கிய நண்பர்கள், வாசகர்கள்  வந்து சிறப்பித்தை நாங்கள் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறோம்.

இந்த நிகழ்வுகளின் வலைப் பதிவுகளையும் ஒலி வடிவங்களையும்

ilakkiyavaasal.blogspot.in  என்ற  வலைப்பூவில் பார்க்கலாம். கீழே உள்ள வலைப் பதிவுகளைச் சொடுக்கினால் தாங்கள் அந்த நிகழ்வின் புகைப்பட -ஓலி வடிவைக் கண்டு – கேட்டு ரசிக்கலாம்.

இந்த சித்திரை மாதத்தில் முதலாம் ஆண்டுவிழா சற்று பெரிய அளவில் நடைபெற உள்ளது. ” இயல் இசை நாடகம்” என்று மூணு நிகழ்ச்சிகள்

இயலுக்கு, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ,பிரபஞ்சன் என்ற இலக்கிய சிகரங்களைப் பேசக் கேட்டு  கவுரவிக்கிறோம்.

இசைக்கு  ஒரு வில்லுப்பாட்டு.

நாடகத்திற்கு , கோமல் சாமிநாதனின்  நாடகம்.

எங்கே ? எப்போது?

இந்த இதழின் கடைசிப்பக்கம் பார்க்க