பஞ்சாங்கம் (சு.ரா.)

பழைய பஞ்சாங்கம் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். அதில்  எத்தனை விஞ்ஞானம் இருக்கிறது தெரியுமா?  அது பெரிய ஆகாயம்.

அந்த வான வெளியை நாம் கொஞ்சம் அண்ணாந்து பார்ப்போமா? 

பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.  அவை: 

வாரம் ,   திதி ,   கரணம்,   நட்சத்திரம்,    யோகம்.

வாரம்:

ஞாயிறு, திங்கள் என்பது  வாரமாகும் . 

திதி:  

திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்கும் உள்ள தூரமாகும். : 

அமாவாசை முதல் பிரதமை   துதியை   திருதியை  சதுர்த்தி   பஞ்சமி   சஷ்டி   சப்தமி   அஷ்டமி   நவமி   தசமி  ஏகாதசி துவாதசி திரயோதசி   சதுர்த்தசி  ஆகிய  15 நாட்கள் .

பிறகு பௌர்ணமி  முதல் மறுபடியும்  பிரதமை   துதியை   திருதியை   சதுர்த்தி   பஞ்சமி  சஷ்டி  சப்தமி  அஷ்டமி      நவமி       தசமி      ஏகாதசி  துவாதசி திரயோதசி  சதுர்த்தசி ஆகிய. 15 நாட்கள்.

மொத்தத்தில் 30 திதிகள். 

கரணம்,

ஒரு திதிக்கு இரு கரணங்கள் . ஆக மொத்தம் 60 கரணங்கள்.  

கீழே கொடுக்கப்பட்டுள்ள  11 கரணங்கள் சுழற்சி முறையில் வரும். 

  1. பவம்
  2. பாலவம்
  3. கௌலவம்
  4. சைதுளை
  5. கரசை
  6. வனசை
  7. பத்திரை
  8. சகுனி
  9. சதுஷ்பாதம்
  10. நாகவம்
  11. கிமிஸ்துக்கினம்

நட்சத்திரம் :

நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 டிகிரி  கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். ( மொத்தம் 360 டிகிரி).  சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது

அனைவருக்கும் தெரிந்த அசுவதி முதல் ரேவதி வரையில் உள்ள:  27 நட்சத்திரங்கள். 

 யோகம்:

சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.

.1. விஷ்கம்பம் 10. கண்டம் 19. பரிகம்
2. பிரீதி 11. விருதி 20. சிவம்
3. ஆயுஷ்மான் 12. துருவம் 21. சித்தம்
4. சௌபாக்கியம் 13. வியாகதம் 22. சாத்தீயம்
5. சோபனம் 14. அரிசணம் 23. சுபம்
6. அதிகண்டம் 15. வச்சிரம் 24. சுப்பிரம்
7. சுகர்மம் 16. சித்தி 25. பிராமியம்
8. திருதி 17. வியாதிபாதம் 26. ஐந்திரம்
9. சூலம் 18. வரியான் 27. வைதிருதி

ராசி: 

 

பன்னிரண்டு ராசிகள்:

  1. மேஷம்
  2. ரிஷபம்
  3. மிதுனம்
  4. கடகம்
  5. சிம்மம்
  6. கன்னி
  7. துலாம்
  8. விருச்சிகம்
  9. தனுசு
  10. மகரம்
  11. கும்பம்
  12. மீனம்

 

ஒரு நட்சத்திரத்தை 4 பங்காக ஆக்குங்கள். ஒவ்வொரு பங்கிற்கும் பாதம் என்று பெயர்.  அப்படியானால் 27 ம் நட்சத்திரத்திற்கு 27 x 4 = 108 பாதங்கள். நாம் இப்போது மேலே கூறிய 12 ராசிகளில் வரிசைக் கிரமமாக அடைக்கப் போகிறோம். ஒரு ராசிக்கு 9 வீதம் 12 ராசிக்கும் 108 பாதங்களை அடைக்கப் போகிறோம்.

ராசியின் பெயர் நட்சத்திரங்கள்
மேஷம் அஸ்வனி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம்.
ரிஷபம் கார்த்திகை 2, 3, 4, பாதங்கள், ரோகிணி 4 பாதங்கள் மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்.
மிதுனம் மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்.
கடகம் புனர்ப்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்
கன்னி உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்
துலாம் சித்திரை 2, 3 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்கள்
விருச்சிகம் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
தனுசு மூலம், பூராடம், உத்திராட்டம் 1-ம் பாதம்
மகரம் உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்
கும்பம் அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டதி 1, 2, 3 பாதங்கள்
மீனம் பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

 

ஆக ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள் வீதம் 27 நட்சத்திரங்களையும் 12 ராசியில் அடக்கி விட்டோம்.

இந்த 12 ராசிகளிலும் 9 கிரகங்களும் வலம் வருகிறது

கிருகங்கள் :

  1. சூரியன் 
  2. சந்திரன் 
  3. செவ்வாய் 
  4. புதன் 
  5. வியாழன்  
  6. வெள்ளி 
  7. சனி 
  8. இராகு (நிழற்கோள்)
  9. கேது (நிழற்கோள்)

சூரியன் ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு மாதம் எடுத்துக் கொண்டு ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் கடக்கிறது. 

 

வாக்கியப் பஞ்சாங்கம் :

கி .மு. 1200 முதல் கி.மு.400 வரையில்  உள்ள காலத்தில் கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ரிஷிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் ஒரு முறையைக் கண்டு பிடித்தனர்.   இது “வாக்கிய முறை” எனப்பட்டது. இதுதான் முதன் முதலாக வந்த பஞ்சாங்கக் கணித முறை. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் “வாக்கியப் பஞ்சங்கம்” எனப்பட்டது.. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.

ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்,  திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம்,ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம்,சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம்,திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்

 

.திருக்கணித பஞ்சாங்கம்

சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு.
வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் இந்தப்  பிழைகளைக்  திருத்திப் புதிய முறையைக் கண்டனர். அதற்குப் பெயர் “திருகணித முறை” எனப்படும். இந்த திருகணித முறையை ஒட்டிப் பஞ்சாங்கங்கள் கணிக்கப் படுகின்றன. இந்தப் பஞ்சாங்கங்களுக்குப் பெயர் “திருகணிதம்” பஞ்சாங்கம் எனப் படும்.
ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கணிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும்.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

 

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு “டெலஸ் கோப்புகள்” வந்து விட்டன. கிரகங்களின் வேகம், பாதையைக் கண்டறியும் அளவிற்குக் கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள கணித முறையும், திருகணித முறையும் எந்த வித மாறுதல் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. 

ஒவ்வொரு வருடமும் பஞ்சாங்கக் கருத்தரங்கங்கள் பொதுவாக ஆடி மாதம்  நடக்கும்.  காஞ்சி மடாதிபதி, அஹோபில மடாதிபதி, தர்மபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் போன்ற மகான்கள் தலைமை வகிக்கும் அந்த கருத்தரங்கங்களில் பிரபல ஜோதிடர்களும், பஞ்சாங்கம் மற்றும் தினசரி காலண்டர் தயாரிப்பாளர்களும், கலந்து கொள்வார்கள்.

கருத்தரங்கில் பெரிய விவாதமே நடக்கும். வாதங்களும், பிரதிவாதங்களும், சர்ச்சைகளும், கருத்துப் பரிமாற்றங்களும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்படும்.

இதில் அனைவராலும், ஒருமுகமாக ஏற்றுக்கொள்ளப்படும் தகவல்களும், நிர்ணயிக்கப்படும் விரத காலங்கள் மற்றும் கோயில் உற்சவ நாட்கள் எல்லாம் அடுத்து வரும் பஞ்சாங்கத்தில் இடம் பெறும்.’

 

ன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்  http://www.eegarai.net/t111579-topic

நன்றி : தமிழ் விகிபீடியா – பஞ்சாங்கம் 

நன்றி : தினகரன் ஜோதிடம்  http://astrology.dinakaran.com