ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )

 

South Indian parents and children operating laptop MR748S 748T 748U 748V

ஷாலு சொன்னதைக் கேட்டு அதை என் மனசில் உள்வாங்கி நான் அதைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நேரம்  பிடித்தது. அப்படியும் சரியாகப் புரியவில்லை.

இதற்கு ஷாலு அடிக்கடி சொல்லும் வார்த்தை – “இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். பொண்டாட்டி   சொன்னா  அதைப் புரிஞ்சிக்க முயற்சியே செய்ய மாட்டாங்க” இதற்குப் பதில் எப்பவும் என் மனசில் ஓடும் ‘ ஏம்மா, தாயிங்களா! புருஷன் காரன் புரிஞ்சிக்கிற மாதிரி என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா?” ஆனால் அதைச் சொல்லிவிட்டு அதனால் விளையும் பக்க விளைவுகளை  நன்றாகப் புரிந்துகொண்டதால் அந்தப் பதில் மண்டையில் உருவாகி தொண்டையிலேயே நின்றுவிடும் .

அதுக்கு மேலே  போய் “உங்களுக்கெல்லால் எதையும் ரெண்டாந்தரம் சொன்னாத் தான் புரியும். ஏன்னா முதல் தரம் எதைச் சொன்னாலும் நீங்க அதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டீங்க! ”  இந்த டயலாக்கை எப்போ கேட்டாலும்  எனக்கு ரெண்டாம் தாரம் – முதல் தாரம் அப்படின்னு காதில் விழுந்து நமுட்டுச் சிரிப்பு வரும். அதைப் பாத்தா ஷாலுவுக்குப் பத்திக்கிட்டு வரும்.

சமீபத்தில வாட்ஸ் அப்பில  ஒரு ஜோக் வந்திருந்தது. மனைவிக்கும் கேர்ள் பிரண்டுக்கும்  என்ன  வித்தியாசம் என்று விலாவாரியா சொல்லியிருந்தாங்க.

மனைவி இருக்கா.ளே  அவ டி வி மாதிரி. கேர்ல்பிரண்ட் மொபைல் மாதிரி.

வீட்டிலே டி‌வி பாப்போம். ஆனால் வெளியே போகும் போது மொபைலத் தான் எடுத்துக்கிட்டு போவோம்.

சிலசமயம் டி‌வி ஐப் பார்த்து ரசிப்போம். அதுவும் புதுசா வந்த போது. ஆனால் மொபைலோடத் தான்  எப்பவும் விளையாடிக் கிட்டே இருப்போம்.

டிவி ஆயுசுக்கும் ப்ரீ. ஆனால் மொபைலுக்கு நீங்க சரியா பணம் போடலைன்னா கனெக்ஷன்  துண்டாயிடும்

டிவி எப்பவும் பெருசா குண்டா இருக்கும். சிலது ஒல்லியா குச்சி மாதிரியும் இருக்கும். ஆனால் எல்லாம் பழசு. மொபைல் கவர்ச்சியா வளைவும் சுழியுமா கைக்கு அடக்கமா இருக்கும்.

என்ன, டிவிக்கு செலவு கொஞ்சம் கம்மி தான். ஆனால் மொபைல் உபயோகத்துக்கு தகுந்த மாதிரி செலவும் எகிறிக் கிட்டே  போகும்.

மொபைல்ல இன்னொரு  சவுகரியம். அதுக்கு ரிமோட் கிடையாது.

முக்கியமான சமாசாரம். மொபைல்ல கேட்கவும் செய்யலாம். பேசவும் செய்யலாம். ஆனால் டிவி , அது மட்டும் தான் பேசிக்கிட்டே இருக்கும். பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கேட்டுத்தான் ஆகணும்.

டிவியை கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா தான் நமக்கு நல்லது. மொபைல் அப்படி இல்லே. நெருக்கமா பாக்கெட்டில வைச்சுக்கலாம்.

இதை ஷாலு கிட்டே படிச்சுக் காட்டினேன். ” ஆனாலும் இந்த ஆம்பிளைங்களுக்கு ஏன் புத்தி இவ்வளவு சீப்பா போகிறது? நாங்களும் தான் மொபைல் வச்சுக்கிறோம். எப்பவாவது அதை பாய் பிரண்டு . புருஷன்காரனை  குத்துக்கல்லு, கிரிக்கெட் பாக்கிற மிஷின், தின்னுட்டு தூங்கற  ஜடம்,  கம்ப்யூட்டர் பைத்தியம், பக்கத்து வீட்டை எட்டிப் பாக்கிற  ஆந்தை, ஜொள்ளு பைப் அப்படின்னு அடிக்கடி சொல்றோமா?” என்று அடி மேல் அடி போட்டுத் தாக்கினாள்.

சும்மா ஒரு ஜோக் சொன்னா இப்படிக்  கோவிச்சுக்கிறியே?

பெண்கள்னா  உங்களுக்கு எப்பவுமே இளக்காரம்.   நானும் ஆம்பளைங்களைப் பத்திச் சொல்லுறேன் கேட்டுக்கோங்கோ ! நாங்க நாலு பெண்கள் சந்திச்சா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்குவோம் ! ஆனா நீங்க தடியா, மாமு, லூசுன்னு அப்படன்னு தானே கூப்பிடறீங்க?

அது சரி, நாங்க எங்களுக்குத் தேவையானா  பத்து ரூபாய் பெருமான சாமானை 20 ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஆனா நீங்க 20 ரூபாய் சாமானை 10 ரூபாய்க்கு உங்களுக்குத் தேவையில்லாட்டி கூட    தள்ளூபடின்னா  வாங்குவீங்க!

இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே! நாங்க  ஏன் உங்க மாதிரி ஆட்களைக் கல்யாணம்  பண்ணிக்கறோம்னு தெரியுமா? அதுக்கக்கப்பறமாவது நீங்க திருந்துவீங்கன்னு தான். ஆனா நீங்க மாறறதேயில்லை.

நாங்க ஏன் உங்களைக் கல்யாணாமா செஞ்சுகறோம்னு தெரியுமா? நீங்க முன்னாடி இருந்த மாதிரி தேவதையா எப்பவும் மாறாம இருப்பீங்கன்னு நினைச்சு தான். ஆனா நீங்க கல்யாணம்  ஆன உடனே பத்ரகாளியா மாறிடறீங்க!

அதுக்கு என்ன காரணம்  தெரியுமா?   நாங்க கல்யாணம் ஆகிற வரைக்கும் எப்பவும் எங்க எதிர்கால நிலமையை நினைச்சு பயந்துகிட்டிருப்போம்.

ஆனா , எங்களுக்கு எங்க எதிர்காலத்தைப் பத்திய கவலையே கல்யாணத்துக்கு அப்புறம் தான்   வருது.

அது எப்படியோ போகட்டும்! நாங்க எப்பவும் எவ்வளவு டீஸண்டா  டிரஸ் பண்ணிக்கறோம். நீங்க எப்பவும் லுங்கி -கிழிசல் பனியன் தான்.   கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது.

அதெல்லாம்  விடு, நீங்க எத்தனை தடவை டிரஸ் மாத்துவீங்க ? காலையில எந்திரிச்சதும்,, குளிச்சிட்டு வந்ததும். கோவிலுக்கு போகும்  போது , குப்பையைக் கொட்டும் போது , புஸ்தகம் படிக்கும் போது, செடிக்கு தண்ணி ஊத்தும் போது – இப்படி ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு டிரஸ். தேவை தானா? நாங்க கல்யாணத்துக்கோ எழவுக்கோ போனா தான் டிரஸ்சே மாத்திக்கறோம்.

நிறுத்துங்க ! உங்களுக்கு நம்ம ஷாSouth Indian parents and children MR748S 748T 748U 748Vலினி ,ஷ்யாம் அவங்களைப் பத்தி என்ன தெரியும்? போன காப்பரிக்ஷையில  ரெண்டு பேரும் என்ன ரேங்க் வாங்கினாங்கன்னு சொல்லுங்க பாப்போம்.

ரேங்க் கார்டை என்  கண்ணிலே  காட்டவே இல்லையே ?

உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்தவே முடியாது. இதைப் பத்தி தான் போன மாசம் எங்க மகிளா சபாவிலே .. “

இத நான் நூறு தடவை கேட்டுட்டேன். அதுக்கு மேல கேக்கிற பொறுமை எனக்கு அப்போ இல்லை.

அதெல்லாம் விடு, ஷாலு,  உன்னோட புது போஸ்ட் பத்தி நீ சொன்னது உண்மையா? நீ தமிழகக் கோமாதா-காமதேனு முன்னேற்றக்   கழகத்தின் கொ.ப.செ யா? GKMK பேரு நல்லா இருக்கு.

“சே! எவ்வளவு பெரிய  கான்செப்ட். அதைப் போய் இப்படிக் கழகம், கொ.பா.செ ஈனு கொச்சையா சொல்றீங்களே? பை த பை , அதென்ன கொ.ப.செ. கேட்டு ரொம்ப நாளாச்சு?

கொள்கை பரப்புச் செயலாளர். அம்மாவுக்கு  அந்தக் காலத்தில எம்.ஜி.ஆர் இருந்த போது கிடைச்ச போஸ்ட். அது என்ன கோமாதா? காமதேனு?           நீ கொஞ்சம் விவரமா சொன்னாத் தானே புரியும்?     என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டேன். இனிமே அரை  மணிக்கு ஷாலுவை யாரும் நிறுத்தமுடியாது.

டி வி ஆரம்பமாகிவிட்டது.

உங்களுக்குப் புரியற  மாதிரி விளக்கமா சொல்றேன். நடுவில குறுக்க பேசக்கூடாது.

நாங்க  சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி வீட்டிலே ஆபூஜை பண்ணினோமே  ஞாபகம் இருக்கா?

எனக்கு ஆயுத பூஜை தான் சட்டென்று ஞாபகம் வந்தது. அப்பறம் தான் குருஜினியும் இவளும் சேர்ந்து கோமாதா பூஜை செய்தது ஞாபகம் வந்தது.  அதிலிருந்து அவ ஆரம்பிச்சா இன்னும் மூணு மணிநேரம் பழைய சரஸ்வதி சபதம் மாதிரி ‘கோமாதா வண்ணக் குல மாதா’ அப்படின்னு ஈஸ்ட்மேன் கலரில் ஆரம்பிச்சிடுவா. அதனாலே பேச்சை மாற்றி ,   “அதில்லை. ஷாலு, சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் மோடிஜியை பாத்ததிலிருந்து சொல்லு.”

ஒரு பத்துப் பதினைஞ்சு நாளை பாஸ்ட் பார்வேர்ட் செய்ய முயற்சித்தேன்.

உங்களுக்கு நல்லா புரியனும்னா அந்த பூஜையிலிருந்து தான் ஆரம்பிக்கணும்.

விதி வலிது தான். சும்மாவா சொன்னாங்க ‘மனைவியோட ஆர்கியூ பண்ணற போது கடைசி ஆர்குமெண்ட் அவளோடது தான். அதுக்கப்பறம் கணவன் பேசறதெல்லாம் அடுத்த ஆர்கியூமெண்டுக்கு  ஆரம்பம்’ என்று. ஷாலு அப்படித்தான். ஏதோ ஒரு படம் வந்ததே. அது என்னா ஸ்பீட் இல்லே அன்ஸ்டாப்பபிள் . ஒரு ரயில் நிக்காமே ஓடிக்கிட்டிருக்குமே. அது தான் ஷாலு.

” சும்மா இருங்க! நம்ம குருஜினி நம்ம வீட்டிலே ஆபூஜை செஞ்ச நியூஸ் டெல்லி வரைக்கும் போயிடுச்சு. அதனால தான் குருஜினியை சென்னை ஏர்போர்ட்டிலே உலக யோக தினத்தில யோகா எல்லாம் செய்யச்சொன்னாங்க.   நாங்க சிங்கப்பூர் போற அன்னிக்கு அதைச் செஞ்சதில மோடிஜி  ரொம்ப  குஷி ஆயிட்டாராம்.  அதனால எங்களை சிங்கப்பூரிலேயே பாக்கணும்னு திட்டம் போட்டாராம். ஆனா அவர் வந்து சேர்ர  அன்னைக்குத் தான் நாங்க அங்கிருந்து கிளம்பற நாள்.  அன்னிக்கு சிங்கப்பூரில அவர் எக்கச்சக்கமான ஒப்பந்ததிலே கையெழுத்து வேற போடணுமாம்.

சரி, அடுத்த நாளைக்கு நான் பிரயாணத்தைச் சேஞ்ச் பண்ணிக்கலாம்னு பாத்தா எங்க விசா அன்னிக்கோடா முடிஞ்சு போகுது. அதனால ஏர்போர்ட்டில  சந்திக்க முடிவு செஞ்சோம். டெல்லி பஜ்ரங்க்பலி அங்கிள் தான் போனிலே குருஜினியோட பேசி எல்லா ஏற்பாடும் செஞ்சார்.

சிங்கப்பூர் ஏர்போர்ட்டிலே நானும் குருஜினியும் வி ஐ பி லவுஞ்சில் உக்காந்திருக்கோம். சுத்திலும் செக்யூரிட்டி. எனக்கு ஹார்ட் படபடன்னு அடிச்சுக்கிட்டிருந்தது. குருஜினியோ அலட்டிக்காம தைரியமா இருந்தாங்க. அப்போ தான் சொன்னாங்க. “எனக்கு மோடிஜியை ரொம்ப வருஷமா தெரியும். அவர் காந்திநகரில முதன் முதலா முதல் அமைச்சரா ஆன போது வாழ்த்து சொன்ன முதல் ஆள் நான் தான். அப்போ  அவர் வீட்டுக்கு எதுத்தாப்போல இருந்த ‘க பார்க்கில’  கோமாதா பூஜை செஞ்சுகிட்டிருந்தேன். ( ஷாலுவின் எக்ஸ்ட்ரா நியூஸ்: அந்த ஊரில ரோட்டுக்கு சர்க்கிளுக்குப் பேர் எல்லாம் க, கா, கி, கீ ,  என்று இருக்குமாம்.)

நடுவில நான் ஒரு கேள்வி மடத் தனமா கேட்டதில குருஜினிக்குக் கெட்ட கோபம் வந்திடிச்சு தெரியுமா?

எனக்கெப்படித் தெரியும்? நீ வழக்கமா கேக்கற மாதிரி கேட்டிருப்பே?

கதை சொல்ற ஜோரில் என்னோட கிண்டலை அவ கவனிக்கவில்லை.  அதனால நான் தப்பிச்சேன் 

“மோடிஜி எப்ப அடையார் காந்திநகரில் இருந்தார்னு கேட்டேன்”

இப்படிக்  கேட்டா குருஜினிக்கென்ன, எனக்கே கோபம் வரும். குஜராத்தின் கேபிடல் காந்திநகர்னு தெரியாதா? ஜியாக்கிரபி கிளாசில அதைச் சாய்ஸில  விட்டிட்டியா? இனிமே ஷிவானிக்கு வேற டீச்சர் பாக்க வேண்டியது தான்.

“எல்லாம் தெரிஞ்சவங்க நீங்களே இனிமே ஷிவானிக்கும் ஷியாமுக்கும் பாடம் சொல்லிக் குடுங்க. இனிமே எனக்கு எக்கச்சக்க வேலை இருக்கு”

இப்போ நான் ஜகா வாங்கவேண்டிய நேரம்.

” அத்தை விடு ஷாலும்மா,  நீ மோடிஜியை மீட் பண்ணினதைப் பத்தி இன்னும் சொல்லவே இல்லையே?

அந்த கோமாதா பூஜை பிரசாதத்தை  குருஜினி  மோடிஜி  கிட்டே கொடுத்த  அன்னிக்கு தான் அவர் சி எம் ஆகிட்டாராம். அதே மாதிரி 2014இல் குருஜினி டெல்லியில கோமாதா பூஜை செஞ்சு  மோடிஜி கிட்டே பிரசாதம் குடுத்த அன்னிக்கு தான் அவர் பி எம் என்ற நியூஸ் வந்ததாம். இதைப் பத்தி என்ன சொல்றீங்க? ரெண்டு தடவையும் பஜ்ரங்கி அங்கிள் தான் கூடவே இருந்திருக்காராம்.

என்ன சொல்வது? காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைன்னு ஷாலுக்கிட்டே அப்போ சொல்ற தைரியம் எனக்கில்லே .

அப்படி நாங்க பேசிக்கிட்டிருக்கும் போது மோடிஜி அந்த ல
வுஞ்சுக்கு வந்தார். எனக்கு அப்படியே “36 வயதினிலே ” ஜோதிகா மாதிரி மயக்கம் போட்டு விழுந்திடுவேனோன்னு பயம் வந்திடுச்சு. தலை சுத்தற மாதிரி இருந்தது.

கொஞ்சம் இருங்கோ ஷிவானி கூப்பிடற மாதிரி இருக்கு.” என்று என்னை சஸ்பென்ஸ் லவுஞ்சில் நிறுத்தி விட்டு ஷாலு பறந்துவிட்டாள்.

எப்பவும் அவ இப்படித்தான். நல்ல மூடிலே இருக்கும்
 போது ‘ போன் அடிக்கிற மாதிரி இருக்கு . எங்க அப்பாவாத் தான் இருக்கும் ‘ னு ஓடிப் போய் விடுவாள்,

“காத்திருந்தேன்.. காத்திருந்தேன்.. “