

உலகையே சுமக்கும் உனக்கு
கேவலம், என் சுமையும்
ஒரு பாரமா?
அண்டத்தை அளாவி ஆள்பவன் நீ
அடியவன் என்னை அடைவதும் உனக்கு, ஒரு தூரமா?
இமைகளின் கனத்தைத்
தாங்கா இருவிழிகள்
இரவெல்லாம்
தூக்கம் துறந்தன.
திருட்டு மூட்டையாம்
குருட்டு வேதனை
தோளில் ஏற்றியே
நடந்த பாதங்கள்
பழகின பாதையும் மறந்தன.
பாரவண்டி பக்கத்தில் இருக்க
என் தலையில் ஏனிந்தச்
சும்மாடு சுமைகேடு?
அப்பாடா ,
என் தோளின் சுமையை
உன் தாளில் போட்டதும்
கண்களில் தூக்கம்
கப்பிக்கொண்டது.
கேவலம், என் சுமையும்
ஒரு பாரமா?
அண்டத்தை அளாவி ஆள்பவன் நீ
அடியவன் என்னை அடைவதும் உனக்கு, ஒரு தூரமா?
இமைகளின் கனத்தைத்
தாங்கா இருவிழிகள்
இரவெல்லாம்
தூக்கம் துறந்தன.
திருட்டு மூட்டையாம்
குருட்டு வேதனை
தோளில் ஏற்றியே
நடந்த பாதங்கள்
பழகின பாதையும் மறந்தன.
பாரவண்டி பக்கத்தில் இருக்க
என் தலையில் ஏனிந்தச்
சும்மாடு சுமைகேடு?
அப்பாடா ,
என் தோளின் சுமையை
உன் தாளில் போட்டதும்
கண்களில் தூக்கம்
கப்பிக்கொண்டது.
Advertisements