
இரவுபகல் பகலிரவு
ஐயப்பன் திருப்புகழ்
தனனதன தனனதன தனதான தானதன
தனனதன தனனதன தனதான தானதன
தனனதன தனனதன தனதான தானதன. தனதான
தனனதன தனனதன தனதான தானதன
தனனதன தனனதன தனதான தானதன. தனதான
இரவுபகல் பகலிரவு எனமாறி மாறிஇரு
பொழுதுசுழ லமிழுவதை உணராது போகநிலை
புலனவிழ உடலமிக வயதாகி ரோகமுற உழல்வேனை
பொழுதுசுழ லமிழுவதை உணராது போகநிலை
புலனவிழ உடலமிக வயதாகி ரோகமுற உழல்வேனை
இருளனைய மறலியென துயிர்சோர மேவுகையில்
அபயமென மரணபய மணுகாம லேநினது
சரணமலர் நிழலருள புலிவாஹ னாவருகை தரவேணும்!
அபயமென மரணபய மணுகாம லேநினது
சரணமலர் நிழலருள புலிவாஹ னாவருகை தரவேணும்!
அரவு,மதி, பெருகுநதி முடிசூடி ஆடுமிறை
அமுதநதி அனையஎழில் உருவான மோஹினியை
அணையசுரர் உளமகிழ அவதார மானதிரு மணிமார்பா!
அமுதநதி அனையஎழில் உருவான மோஹினியை
அணையசுரர் உளமகிழ அவதார மானதிரு மணிமார்பா!
அரசரொடு பொருதவர்தம் குலகால னாகி,அரி
சிலைவளைய கருவமழி படவாடி நாணிவரு
பரசுமுனி அருளும்வளர் மலையாள தேசமதில் உறைவோனே!
சிலைவளைய கருவமழி படவாடி நாணிவரு
பரசுமுனி அருளும்வளர் மலையாள தேசமதில் உறைவோனே!
விரதநெறி பரவியிரு வினைதீர நாடியுனை
அணுகுமுன தடியவரின் இடர்தீர மாமலையில்
கருணைபொழி முகிலெனநி லாவுமழ கா,இளைய சிவபாலா!
அணுகுமுன தடியவரின் இடர்தீர மாமலையில்
கருணைபொழி முகிலெனநி லாவுமழ கா,இளைய சிவபாலா!
விழியசைவில் நில(வு)இரவி புவிகோள்கள் மீன்களிவை
உலவிவர, ஒளியுமிழ, விதிவேத மாக, மலர்
நறையவிழ, நதிபெருக, நவகோடி நாதமெழ அருள்வோனே!
உலவிவர, ஒளியுமிழ, விதிவேத மாக, மலர்
நறையவிழ, நதிபெருக, நவகோடி நாதமெழ அருள்வோனே!
அரசு,மரு தகில்,கதலி கமுகால் பலாவளர
அரவமொடு புலிகரடி மதயானை தாமுலவும்
அடவிபடர் பெருவழியின் நுழைவாயி லானதலம்; ஜதிகூறும்
அரவமொடு புலிகரடி மதயானை தாமுலவும்
அடவிபடர் பெருவழியின் நுழைவாயி லானதலம்; ஜதிகூறும்
அதிருமிடி எனமுழவின் ஒலிசேர, வாவரடி
தொழுதடியர் நடனமுடன் வரவேகி ராதனென
எழில்மலியு மினியபுரி எருமேலி மேவிவளர் பெருமாளே!
தொழுதடியர் நடனமுடன் வரவேகி ராதனென
எழில்மலியு மினியபுரி எருமேலி மேவிவளர் பெருமாளே!