ஆதவன் துயில் கொண்டான்
இனிய மாலையில் ஆதவன்
தன் கிரணங்களை மறைத்து
துயில் கொண்டான்
காரிருள் சூழ்ந்தது கண்டாய்
காலை விடியும் வரை
அவன்வரவை கண்மூடி
காத்திருப்போம்
கலங்காதிரு மனமே.
படும்துளி எழில்தரும்
மலர்தனில் தேன்வரும்
வண்டினம் அலைமோதும்
கதிரவன் கீழ்வானில்
காலை விழித்தெழும் .
உதித்தனன் கதிரவன்
செம்பிழம்பாய் கொதித்தனன்
தகித்தனன் வையம்காக்க
முரசுகொட்டி தட்டி எழுப்பினன்
தன்பணி செவ்வனே செய்தனன்
பூஉலகு விழித்தது கண்டு மகிழ்ந்தனன்
தன்பணி தொடர்ந்தனன்
காலை கதிரவன் நமக்கு மேலே
ஆம் நமக்கு மேலேதான்
ஏமாற்றம் தரும் வேளை
ஏமாற்றம் தரும் வேளை
அன்பும் போலி
வாழ்வும் போலி
நினைவும் போலி
புன்னகையும் போலி
அதனால்
நியாயம் எங்கே
நேர்மை எங்கே
நிஜங்கள் எங்கே
வலை வீசி தேடினும்
புலப்படாது இங்கே .
Awesome!!!!! Really great!
LikeLike