ஒரு கணவன் தன் மனைவியிடம் காலையில் எழுந்ததும் அவளைப் பார்த்து ” இன்று மிக நல்ல நாள்’ என்றான்.
மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஆயிற்று இவனுக்கு ? என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் சென்று விட்டாள்.
அடுத்த நாள் காலையிலும் அவளைப் பார்த்ததும் ” இன்று மிக நல்ல நாள்’ என்றான். அவளும் , ஏதோ .லூஸ் மாதிரி பேசுகிறான் என்று கண்டு கொள்ளாமல் போய் விட்டாள்.
இப்படியே நாலைந்து நாட்கள் நடந்து கொண்டிருந்தது. அவளுக்குப் பொறுமை எல்லை மீறியது. ” ஏன் இப்படி தினமும் இன்றைக்கு நல்ல நாள், இன்றைக்கு நல்ல நாள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய்? என்று கத்தினாள்.
கணவன் மெல்லக் காரணத்தைச் சொன்னான். ” போன வாரம் நாம சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது நீ சொன்னது ஞாபகம் இருக்கா? ஒரு நல்ல நாள் பார்த்து நான் உங்களை விட்டுட்டுப் போயிடுவேன் ‘ என்று சொன்னாயே! அதனால தான் தினமும் உனக்கு ஞாபகப் படுத்தினேன். இன்னிக்கு நல்ல நாள் என்று”
இது எப்படி இருக்கு?