பொன்னியின் செல்வன், கடல்புறா, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், நான் கிருஷ்ண தேவராயன் போன்ற எண்ணற்ற ஒலிப் புத்தகங்களைத் தயாரித்து வெளியிட்ட பாம்பே கண்ணன் அவர்கள் ‘பொன்னியின் செல்வனை’ ஓர் ஒளிப்படமாகத் (TELE FILM) தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
நட்சத்திரங்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
இதைப் பற்றி அவரே தன் முகநூலில் கூறியவற்றை உங்களுக்காகக் கீழே தந்திருக்கிறேன்.
கல்கியின் பொன்னியின் செல்வன் ஒளிப்படம்
ஒளிப்பட வேலைகள் துவங்கி விட்டன
நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது
படப்பிடிப்பிற்கான இடங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன
உடைகளும் காட்சி அமைப்புகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன
ஆனாலும் என்னுடைய பொன்னியின் செல்வன் TELEFILM என்று நான் கூறியதும் பலரும் எத்தனை EPISODE என்று கேட்கிறார்கள் திரைப்படமா என்றும் கேட்கிறார்கள்
அவர்களுக்காக இந்த விளக்கம்
நான் திட்டமிடுவது ஒரு முழுநீள தொலைக் காட்சித் திரைப்படம்தான்
ஆனால் இதைத் தற்சமயம் திரை அரங்குகளில் பார்ப்பதற்காகத் தயாரிக்கப் போவதில்லை
திரை அரங்குகளுக்குச் செல்லவேண்டுமானால் அங்குள்ள பெரிய திரையில் காட்டும் வண்ணம் சில விஷயங்கள் படப்பிடிப்பிலேயே இருக்கவேண்டும்.மேலும் திரை அரங்குகளுக்குள் செல்ல விநியோகஸ்தர்கள் திரை அரங்கு உரிமையாளர்கள் இவர்களின் தயவு வேண்டும். மிகுந்த பொருட்செலவில் விளம்பரங்கள் செய்யப்படவேண்டும். விநியோகஸ்தினர்களை நாடினால் பிரபலமான நட்சத்திரங்கள் யாரென்று கேட்பார்கள் அல்லது பிரபலமான இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும். பல கோடிகள் முதலீடு தேவைப்படும். இல்லை என்றால் அது சூதாட்டம்தான்.
இவற்றை எல்லாம் தற்சமயம் நினைக்காமல் இந்தப் படத்தை ஒரு வீடியோ பிலிமாகத் தயாரிக்க முற்பட்டு வருகிறேன்
மேலும் பொன்னியின் செல்வன் போன்ற படத்தைத் திரை அரங்குகளுக்குக் கொண்டு செல்ல வேண்டுமானால் அதை ஒரு இரண்டு மணி நேர படமாகச் சுருக்க வேண்டும்
அது பொன்னி மட்டும்தான். பொன்னியின் செல்வன் அல்ல
யானையை பானைக்குள் அடைப்பது போன்றது
ஆனால் என்னுடைய படம் அந்தக் கதைக்கு – அந்த சரித்திரத்திற்கு எவ்வளவு நீளம் தேவையோ அதை – அதன் தரம் குறையாமல் எப்படி எடுக்க வேண்டுமோ அவ்வாறு இருக்கும்
என்னுடைய இப்போதைய கணிப்பு 300 நிமிடங்களுக்குள் இருக்கும் என்பது.
இதுவே இரண்டு பகுதிகளாக வெளிவரும்.
வெளி நாடுகளில் சில சிறந்த நாவல்கள் திரைப் படங்களாக வருவதில்லை அவை இப்படிபட்ட TELEFILM களாகவே வருகின்றன என்பதை நான் கண்டிருக்கிறேன்.
உதாரணமாக ARTHUR HAILEY போன்றவர்களின் படைப்புகள்
மேலும் TELEVISION தொடராக தயாரிக்கலாமே என்பதற்கு என்னுடைய பதில்:
அதன் சிரமங்களை, அறிந்தவர்கள் சொல்வார்கள்!
அதற்கான முதலீட்டில் நான் இரண்டு பொன்னியின் செல்வன் எடுத்து விடுவேன்
மேலும், என்னுடைய படத்தில் அந்தந்த சரித்திர பாத்திரங்கள் மட்டுமே மனதில் நிற்பார்களே தவிர நடிகர்களைக் கொண்டு பாத்திரங்கள் அடையாளம் காணமாட்டார்கள். அந்த அளவிற்குப் பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கப்போகும் பொருத்தமான நடிகர்கள் இருப்பார்கள்
பொருத்தமான காட்சி பின்னணி காட்சிக்குத்தேவையான வெளிப்புறங்களில் படப்பிடிப்பு,அரங்க நிர்மாணம், உடைகள் கல்கியின் வசனங்கள் இசை மற்றும் பாடல்கள் எல்லாம் உண்டு
பின்னாளில் ஒருநாள் இதுவும் திரை அரங்குகளுக்கு செல்லும் – தொலைக் காட்சிகளில் இடம்பெறும் என்ற நம்பிக்கையோடு அதற்குத் தேவையான TECHNICAL மாற்றங்களைக் குறைந்த செலவில் செய்யும் வண்ணம் இப்போது இதைத் தயாரிக்கின்றேன்
இதைப் பற்றியும் கிராபிக்ஸ் பற்றியும் தொழில்நுட்ப வல்லுனர்களோடு பேசி வருகிறேன்
மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்த TELEFILM என்னும் திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன்
நீங்கள் பார்க்கப்போவது ஒரு திரைப்படத்திற்கு நிகரானதாக இருக்கும்
நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே DVD அல்லது வலைத்தளத்தில் காண்பீர்கள்
உங்களிடம் மீண்டும் ஒரு முறை நான் கேட்க விரும்புவதெல்லாம் நீங்கள் அறிந்ததே
இதன் மாபெரும் பொருட்செலவிற்கான ஆதரவு
எங்களால் முடிந்த வரையில் இதில் செலவு செய்யப்போகிறோம்
இருந்தும் இதன் பிரம்மாண்டம் காரணமாக ,இது எல்லோர் மனதில் இருக்கும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக அமைய வேண்டுமென்ற ஆசையினால்,நம் மனதில் இருக்கும் பாத்திரங்கள் கண் முன் தத்ரூபமாக தோன்ற வேண்டுமென்ற ஆவலினால், உங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன்
என்னுடைய ஒலிப்புத்தகங்கள் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் அடுத்து எப்போது என்றும் அவர்கள் மனதிற்கு தோன்றும் சில கதைகளை ஒலிப்புத்தகமாக செய்யுங்கள் என்றும் விண்ணப்பங்களை முன் வைக்கிறார்கள்
நிச்சயம் ஒருநாள் கடவுள் அனுக்ரகமும் உடல் மனது தெம்பும் இருந்தால் நேரமும் கிடைத்தால் செய்வேன்
இதற்கிடையில் நான் கேட்பதெல்லாம் கல்கியின் ரசிகர்களும் பொன்னியின் செல்வன் நாவலை ஒளிப்படமாக பார்க்க விரும்புவர்களும் சிறிய முயற்சியாக இதற்கு உதவலாமே
உங்களால் முயன்ற அளவிற்கு ஒரு ஐந்துலிருந்து பத்து விநாடி படம் தயாரிப்பதற்கு ஒவ்வொருவரும் உதவினாலே சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல தேவையான ஆதரவு கிடைத்து விடும்
குறிப்பாக வெளி நாட்டில் வாழும் கல்கியின் ரசிகர்களும் என் ரசிகர்களும் இதற்கு பெரும் உதவியாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன்
மிண்டும் படப்பிடிப்பு துவங்கியவுடன் உங்களை அணுகுகிறேன்.
என்னுடைய எண்ணமே துவங்கிய படம் வெற்றிகரமாக முடிய வேண்டும்
நாம் கல்கியின் கதாபாத்திரங்களை திரையில் காண வேண்டும்
அவர்களுடன் சில மணி நேரங்களை கழிக்க வேண்டும் என்பதுதான்
இந்த விண்ணப்பம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்தான்
அவர்கள் கொடுக்கப்போகும் சிறிய தொகை ஒவ்வொரு நாளும் அவர்கள் பெயர் சொல்லும்
உதவ விரும்புவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் வங்கிக் கணக்கு தருகிறேன் அதில் செலுத்தி விடுங்கள்
கண்டிப்பாக செய்வீர்கள் என நம்புகிறேன்
இதுவரையில் ஆதரவு அளித்துள்ள சில நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி வணக்கம்
Computer graphics எனப்படும் தொழில் நுட்பம் தெரிந்த கலைஞர்கள் இந்தத் தொலைக் காட்சிப் படத்திற்குத் தேவைப்படுகிறார்கள்
புதியவர்கள் அனுபவஸ்தர்கள் ஆலோசனை வழங்க என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்
பாம்பே கண்ணன்