
டம் டமார டம்! நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி!
என்று டமாரம் அடித்துக்கொள்ள வேண்டிய செய்தி!
குவிகம் மின்னிதழ் உங்கள் கணினியில் மற்றும் கைபேசியில் கடந்த மூன்றரை வருடங்களாக வந்து கொண்டிருக்கிறது !
குவிகம் இலக்கியவாசல் 27 மாதங்களாக , மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
இப்போது குவிகம் பதிப்பகம் என்ற புதிய அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
அதன் முதல் வெளியீடாக குவிகம் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான கிருபாநந்தன் அவர்களின் ” சில படைப்பாளிகள்” என்ற புத்தகம் இந்த மாதம் வெளியிடப்பட உள்ளது.
இது குவிகம் மின்னிதழில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் “எனக்குப் பிடித்த படைப்பாளிகள்” என்ற தலைப்பில் கிருபானந்தன், “எஸ் கே என் ” என்ற பெயரில் எழுதி வந்த தொடரின் தொகுப்பாகும்.
இந்தப் புத்தக வெளியீடு விழா வருகிற ஜூலை 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆள்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடைபெறும் !
அனைவரும் வருக! ஆதரவு தருக!
மற்ற நண்பர்கள் தங்கள் புத்தகங்களைப் பதிப்பிக்க விரும்பினால் எங்களை அணுகலாம்.
எந்தவித லாப நோக்கமுமின்றிக் குறைந்த செலவில் உங்கள் புத்தகங்களைத் தயார் செய்து தருகிறோம்.