விஜய் சேதுபதி : நான் ஒரு கதை சொல்லட்டா?
மாதவன்: அது மட்டும் வேண்டாம்… என்னென்னவோ சொல்லி என்னை செண்டிமெண்டா யோசிக்க வைச்சுட்டு நீ பாட்டுக்கு முருங்க மரம் ஏறிடுவே!
விஜய் சேதுபதி : அது எப்படி சார்! என் கண்ணில படம் பாத்திங்களா ? அப்படியே சொல்றீங்க?
மாதவன்: ஏய்! வால் இருக்கிறதனால பூனையும் எலியும் ஒண்ணுன்னு ஆகுமா? நாம ரெண்டு பேரும் தாடி வெச்சா ஒண்ணாயிடுவோமா? திருடன் திருடன் தான். போலீஸ் போலீஸ் தான் !
விஜய் சேதுபதி: சும்மா சொல்லக் கூடாது சார் ! படம் முழுசும் நீ டக்கரா வெறைப்பா உர்ருன்னு இருக்கே! லாயர் பொண்டாட்டி கிட்டேயாவது கொஞ்சம் குஜாலா இருக்கக் கூடாது?
மாதவன்: அதையும் நீதானே கெடுத்தே! உனக்கு அவ வக்காலத்து வாங்கினதினால என் வீட்டிலேயும் பிரச்சினை! உனக்கென்ன அப்படி ஒரு என்ட்ரி? ஷோலே அம்ஜத்கான் மாதிரி.
விஜய் சேதுபதி: பின்னே! நீ பாட்டுக்கு டுப்பு டுப்புன்னு எங்க ஆளுங்களை எல்லாம் சுட்டுட்டு நிம்மதியா தூங்கிடுவே! நான் சும்மா இருக்க முடியுமா? அதனாலதான் நானும் ரவுடிதான்னு காமிச்சேன்!
மாதவன்: ஆனாலும் படம் பூராவும் நீ கலக்கறே! டசக்கு டசக்குன்னு பாட்டு ! அட்டகாசமான பிஜிஎம்! நிறைய பன்ச் டயலாக் வேற! உன் காட்டுலே மழை!
விஜய் சேதுபதி: ஏன் சார்! உனக்கு என்ன கொறைச்சல். சிரிச்சா ரொம்பவும் அழகா இருக்கே! பொண்டாட்டியைக் கொஞ்சி ‘யாஞ்சி’ன்னு செம பாட்டு பாடறே! அது என்ன சார் யாஞ்சி? எனக்கும் ரொமான்ஸ் கதை இருக்குன்னு சொல்றேன், எவனும் கேக்கமாட்டேங்கிறான்.
மாதவன்: உன் கதையில செண்டிமெண்ட் தூக்கலா இருக்கு. அதை வைச்சுட்டுதானே இரும்பா இருந்த என்னை வளைச்சுப்பிட்டியே !
விஜய் சேதுபதி : நான் செண்டிமெண்ட்காரன்தான். என் தம்பி, அவன் பொண்டாட்டி, கூட இருக்குற பசங்க – இவனுகளுக்கு பிரச்சினைன்னு வந்தா அதத் தீக்கறதுக்கு என்ன வேணுமுன்னா பண்ணுவேன்.
மாதவன்: இதுல என்ன பெருமை வேண்டியிருக்கு? கடைசியில நீ தான் துரோகத்தையும் காட்டிக் கொடுத்தே! என் உயிரையும் காப்பாத்தினே! அது சரி , சண்டை போடும்போது ‘ நான் நல்லா கன் பிடிக்கிறேனா சார்னு ‘ லொள்ளு காட்டி ஸ்டைல் வேற பண்ணறே? அப்ளாஸ் வாங்கவா?
விஜய் சேதுபதி: அது கிடக்கட்டும் சார்! கடைசியா ஒரு கேள்வி . இந்தக் கதையில கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். “செஞ்சவனைப் போடறதா? இல்லே செய்யச் சொன்னவனப் போடறதா?”
மாதவன் : நான்தான் ஒத்துக்கிட்டேனே! செய்யச் சொன்னவனைத் தான்னு !
விஜய் சேதுபதி: அப்ப சரி ! நாம என்ன கலக்கினாலும் நம்மளை நடிக்க வைச்ச டைரக்டர்கள்தானே கிரேட்?
மாதவன்: சந்தேகமேயில்லை! அவங்கதான் கிரேட்! ஆனா அதைச் சொல்லி நீ தப்பிச்சுக்க முடியாது.
விஜய் சேதுபதி: நீயும்தான் சார்!
(இருவரும் துப்பாக்கியை எடுத்து மற்றவர் மீது குறி வைக்கிறார்கள்)