விக்ரம் வேதா – விமர்சனம்

 

Related image

விஜய் சேதுபதி : நான் ஒரு கதை சொல்லட்டா?

மாதவன்: அது மட்டும் வேண்டாம்… என்னென்னவோ சொல்லி என்னை செண்டிமெண்டா யோசிக்க வைச்சுட்டு நீ பாட்டுக்கு முருங்க மரம் ஏறிடுவே!

விஜய் சேதுபதி : அது எப்படி சார்! என் கண்ணில படம் பாத்திங்களா ? அப்படியே சொல்றீங்க?

மாதவன்:  ஏய்! வால்   இருக்கிறதனால பூனையும்   எலியும் ஒண்ணுன்னு  ஆகுமா? நாம ரெண்டு பேரும் தாடி வெச்சா ஒண்ணாயிடுவோமா? திருடன் திருடன் தான். போலீஸ் போலீஸ் தான் !

விஜய் சேதுபதி:  சும்மா சொல்லக் கூடாது  சார் !  படம் முழுசும்  நீ டக்கரா  வெறைப்பா  உர்ருன்னு இருக்கே! லாயர் பொண்டாட்டி கிட்டேயாவது கொஞ்சம் குஜாலா  இருக்கக் கூடாது?

மாதவன்:  அதையும் நீதானே கெடுத்தே!  உனக்கு அவ வக்காலத்து வாங்கினதினால  என் வீட்டிலேயும் பிரச்சினை! உனக்கென்ன அப்படி ஒரு என்ட்ரி? ஷோலே அம்ஜத்கான் மாதிரி.

விஜய் சேதுபதி:  பின்னே! நீ பாட்டுக்கு டுப்பு டுப்புன்னு எங்க ஆளுங்களை எல்லாம்  சுட்டுட்டு நிம்மதியா தூங்கிடுவே! நான் சும்மா இருக்க முடியுமா?  அதனாலதான் நானும் ரவுடிதான்னு காமிச்சேன்!

மாதவன்: ஆனாலும் படம் பூராவும் நீ  கலக்கறே!  டசக்கு டசக்குன்னு பாட்டு ! அட்டகாசமான பிஜிஎம்!  நிறைய பன்ச் டயலாக் வேற! உன் காட்டுலே மழை!

விஜய் சேதுபதி: ஏன் சார்! உனக்கு என்ன கொறைச்சல். சிரிச்சா ரொம்பவும் அழகா இருக்கே! பொண்டாட்டியைக்  கொஞ்சி  ‘யாஞ்சி’ன்னு செம பாட்டு பாடறே! அது என்ன சார் யாஞ்சி? எனக்கும்   ரொமான்ஸ் கதை இருக்குன்னு சொல்றேன், எவனும் கேக்கமாட்டேங்கிறான்.

மாதவன்: உன் கதையில செண்டிமெண்ட் தூக்கலா இருக்கு. அதை வைச்சுட்டுதானே இரும்பா இருந்த என்னை வளைச்சுப்பிட்டியே !

விஜய் சேதுபதி : நான் செண்டிமெண்ட்காரன்தான்.  என்  தம்பி, அவன் பொண்டாட்டி,  கூட இருக்குற பசங்க – இவனுகளுக்கு பிரச்சினைன்னு வந்தா அதத் தீக்கறதுக்கு என்ன வேணுமுன்னா பண்ணுவேன்.

மாதவன்: இதுல என்ன பெருமை வேண்டியிருக்கு?  கடைசியில நீ தான் துரோகத்தையும் காட்டிக் கொடுத்தே! என்  உயிரையும் காப்பாத்தினே! அது சரி ,  சண்டை போடும்போது ‘ நான் நல்லா கன் பிடிக்கிறேனா சார்னு ‘ லொள்ளு   காட்டி ஸ்டைல் வேற  பண்ணறே?  அப்ளாஸ் வாங்கவா?

விஜய் சேதுபதி: அது கிடக்கட்டும் சார்! கடைசியா ஒரு கேள்வி . இந்தக் கதையில கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். “செஞ்சவனைப் போடறதா? இல்லே செய்யச் சொன்னவனப் போடறதா?”

மாதவன் : நான்தான் ஒத்துக்கிட்டேனே! செய்யச் சொன்னவனைத் தான்னு !

விஜய் சேதுபதி: அப்ப சரி !  நாம என்ன கலக்கினாலும் நம்மளை நடிக்க வைச்ச டைரக்டர்கள்தானே கிரேட்?

மாதவன்:  சந்தேகமேயில்லை! அவங்கதான் கிரேட்!    ஆனா அதைச் சொல்லி நீ தப்பிச்சுக்க முடியாது.

விஜய் சேதுபதி: நீயும்தான் சார்!

(இருவரும் துப்பாக்கியை எடுத்து மற்றவர் மீது குறி வைக்கிறார்கள்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.