சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபம் சென்னை அடையாரில் சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே கட்டப்பட்டு அவரது பிறந்த நாளான அக்டோபர் 1 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
ஒரு மாபெரும் கலைஞனைப் போற்றுவதில் பெருமைப்படவேண்டும்!
இதுநாள்வரை கேள்விப்படாத செய்தி ஒன்று.
சிவாஜி நடித்த திருவிளையாடல் படத்தில் வரும் சிவன்-நக்கீரன்-தருமி வசனமும் நடிப்பும் அனைவரது பாராட்டையும் பெற்றது.
ஆனால் நான் பெற்ற செல்வம் என்ற படத்தில் அதையே ஒரு நாடகமாகக் காட்டியிருக்கிறார் அதன் வசனகர்த்தா A P நாகராஜன். அதில் சிவாஜி நக்கீரனாகவும் சிவனாகவும் நடிக்கிறார். வசனம் கிட்டத்தட்ட அதே மாதிரி.
திருவிளையாடலில் அதே காட்சியை நாகேஷின் துணையோடு மேலும் மெருகேற்றிக் கால காலமாக நினைவில் நிற்கும் காட்சியாக மாற்றியிருக்கிறார் A P நாகராஜன்.
பழைய நான் பெற்ற செல்வத்தில் இந்தக் காட்சியைப் பார்க்க வேண்டுமா? இதோ…….