குவிகம் இதழில் வரும் கதை, கட்டுரை, கவிதை மற்றும் காணொளிகளைப்பற்றி சில வாசகர்களின் கருத்துக்கள்
இதோ:
( நீங்களும் எழுதலாம் – போஸ்ட் கார்டில் அல்ல – இமெயிலில் அனுப்பலாம் editor@kuvikam.com
கம்ப்யுட்டர் காதல் , தமிழ் எழுத்தாளர்களுக்கான இலங்கை ஜெயராஜ் அறிவுரை இரண்டும் அபாரம் – தமிழ்ப்பண்ணை
பேசா பெருமரம் கவிதைபற்றி……
கவிஞர் நிலா ரவியின் கற்பனை வளம் என்னை பிரமிக்க வைக்கிறது. அபாரம். இயற்கை பேரளிப்பையும், அதனால் எழும் வணிக பேராசையையும் ஆதாமும் ஏவாளும் கருத்தரிப்பு நிலையங்களில் கால்கடுக்க நிற்கும் கொடுமையை கண் முன் நிறுத்துகிறார் – ஆறு சரவணா பெருமாள்
அசோகமித்திரன் பற்றி ..
அருமையான நினைவேந்தல் – சுரேஷ்
பொன் குலேந்திரனின் “விசித்திர உறவு’ பற்றி
உண்மை கற்பனையைவிட அதிசயமானது – இராய செல்லப்பா
அழகியசிங்கரின் ‘கடிகாரம்’ பற்றி
அழகான உருவகக் கதை – இராய செல்லப்பா
சரித்திரம் பேசுகிறது பற்றி …
தமிழக மற்றும் இந்திய அரசியல் களம் இன்று பிருகத்ரதன் கதை மாதிரிதான் இருக்கிறது.. – புவனேஸ்வரன்
கிண்டிலில் தமிழ்ப்புத்தகம் பற்றி ..
இவ்வளவு ஈசியா புத்தகம் போடலாமா? ஆச்சரியமா இருக்கே! – ராஜாராமன்
ஏன்யா கதைன்னு பெருசு பெருசா போட்டுக் கழுத்தை அறுக்கறே? சின்னதா போடக்கூடாதா? – கிருஷ்ணமூர்த்தி
I was looking forward to read and kept searching for the கடைசிப் பக்கம். This wrap up of the கடைசிப் பக்கம் is an enjoyable to read – solid message, content mixed with subtle humour, a vistas of topic too – மாலதி ஸ்வாமிநாதன்
ஆகஸ்ட் 15 இதழ் பார்த்தேன் நல்ல அம்சங்கள். முக்கியமாக தேவதச்சனின் ஆவணப் படம் இங்கே தான் பார்க்கக் கிடைத்தது – வைதீஸ்வரன்