உன்னையே நினைக்க வேண்டும் – முருகாநீ
என்னுடனே இருக்க வேண்டும்
உனைத்துதிக்கும் பாட்டினது ராகமாய் இருக்கவேண்டும்
மெல்லமெல்ல வந்துவந்து உன்னையே தழுவவேண்டும்
உன்னையே நினைக்குமந்த எண்ணவலையாய் இருக்கவேண்டும்
பரந்தவுன் மார்பகத்தில் நான்சங்கமம் ஆகவேண்டும்!
பாடுகின்ற பக்தர்களின் நாவினில்நான் இருக்கவேண்டும்
எப்போதும் உன்நாமம் பாடியேநான் மகிழவேண்டும்
கோஷமிடும் வேதத்தின் சொற்றொடரா யாகவேண்டும்
மணக்குமுன் மேனியினை யொற்றியொற்றி விடவேண்டும்!
உன்நினைவே இன்பம் துதிபாடல் பேரின்பம்
ஆறுபடை வீட்டினிலே வெவ்வேறு உருவத்தில்
கண்கொள்ளாக் காட்சியினைக் கண்குளிரக் கண்டுவிட்டு
தேமதுர மலரினையே சுற்றிவரும் வண்டானேன்