
ஆனா
”டேய்..ஓடாதே..
நில்ரா.. எதுக்குடா இவளை தூக்கிட்டு ஓடறே ?”
”நீங்கதானே சார் சொன்னீங்க.
விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு ” 🏃🏻
“(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா)”
“என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு”
“(ஆத்தி இடியாப்பமா இது) சூப்பர் செல்லம்”
ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா ‘சூடுய்யா” – அதை வச்சதே என் மனைவி
சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க …..?
கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா…..?
கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்…..
கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு முருகனைத்தான்
ரொம்பப் பிடிக்கும் …..
அப்போ பின்னாடி…..?
அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம்
நான் வேண்டாத தெய்வமே இல்லை…..!!!
சத்தியவான் சாவித்திரி …..
தன் கணவனை…..
எமதர்ம ராஜாவிடமிருந்து
தன் தந்திர வரங்களால்
கடுமையாகப் போராடி மீட்டாள்…..
கதையின் கருத்து :–
ஒரு புருஷன…
பொண்டாட்டிகிட்ட இருந்து …..
எமதர்மனால கூட
காப்பாத்த முடியாது…..!!!
மனைவி:
ஏங்க! உங்களைக்
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு
என் புத்தியை
செருப்பாலத்தான்
அடிச்சுக்கோணும்…..!
கணவன்:
செருப்பு இந்தா இருக்கு…..!
புத்திக்கு எங்கே போவ!!??
கணவன்:
“என்ன சமைச்சிருக்கே …?
சாணி வரட்டி மாதிரி இருக்கு…
நல்லாவேயில்லை”….
மனைவி:
“கடவுளே! ….. இந்த மனுஷன்
இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ…..? தெரியலையே…
ஏ…ஏ… ஏ…..” !
மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்…..
அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்.
நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்,
மனைவி வந்தபின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..
மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது
பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு
ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு…
அவன் தான் நகை கடைக்காரன்