வேறொரு தாள வரிசையில் ஐயப்பன் திருப்புகழை ரவி அவர்கள் ஜனவரி 2017 குவிகம் இதழில் பாடியிருந்தார்.
இப்போது புதுப்பாடல் !
தனதான தந்த தனதானதந்த
தனதான தந்த தனதான
இருவேளை உண்டு வெறுமேதிரிந்து
பயனேதுமின்றி உழல்வேனை
இருள்மாயை என்ற திரையேவிழுந்து
இகபோகம் என்று திரிவேனை
அருளாசி பொங்க மகவாய் உகந்து
மறுவாழ்வு தந்த குருநாதா!
அழகான பம்பை நதியோரம் அன்று
சிசுவாய்மலர்ந்த சிவபாலா!
மருளாத சிந்தை ஒருபோதும் உன்னை
மறவாத நெஞ்சம் அருள்வாயே!
மலையே பிளந்து வடிவேல் எறிந்த
மலைவாசி கந்தன் இளையோனே!
விரைசூழும் வண்ண மலர்மாலை தங்கு
விரிமார்பிலங்க அமர்வோனே!
விரிவான் விளங்க ஒளிர்ஜோதி என்று
மலைமேல் எழுந்த பெருமாளே!