திருச்சியைச் சேர்ந்த பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான டாக்டர் அறிவொளி உடல்நலக் குறைவால் தனது 80வது வயதில் இம்மாதம் காலமானார்.
டென்மார்க்கில் உள்ள புகழ்பெற்ற கோபேன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் டாக்டர். அறிவொளி.
உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை எடுத்துச்சென்ற இவர்,புற்றுநோய்க்குத் தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறியதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தனது வாழ்நாளில் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
நன்றி : வானவில் தமிழ்ச் சங்கம்
அவருடைய வித்தியாசமான வாதத்தை இந்தக் காணொளியில் காணலாம் !