பட்டிமன்றங்கள் – அதுவும் சாலமன் பாப்பையா , ராஜா, பாரதி பாஸ்கர் இவர்களால் மிகவும் ( அளவுக்கு அதிகமாகவே) பிரபலப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு!
பண்டிகைகள் வந்தால் தொலைக்காட்சியைத் திருப்பினால் பட்டிமன்றத்திலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது.
இருந்தாலும் 60. 70 களில் இருந்த வழக்காடுமன்றம் இப்போது மறைந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.
வழக்காடுமன்றம் என்பது ஒரு இலக்கியப்பாத்திரம் ஒரு இலக்கியத்தில் செய்த சில செயல்கள் தவறானவை என்பதால் அவர் குற்றவாளி என்று ஒருவர் வாதிடுவார் . அவர்தான் பப்ளிக் பிராஸிக்யூட்டர் (பொது வழக்கறிஞர்)
அவர் இன்னென்ன காரணங்களால்தான் அவற்றைச் செய்தார் அவற்றில் எந்தவிதத் தவறும் இல்லை என்று கூறி அவர் குற்றவாளி இல்லை என்று மற்றவர் வாதிடுவார். அவர் டிஃபென்ஸ் வக்கீல் (பாதுகாப்பு வழக்கறிஞர்)
இருவர் வாதங்களையும் அவர்கள் அளித்த ஆதாரங்களையும் கணக்கில் கொண்டு நடுவர் ஒருவர் தீர்ப்பு அளிப்பார்.
உதாரணமாக , மகாபாரதத்தில் “கர்ணன் ஒரு குற்றவாளி” என்பது ஒரு வழக்காடுமன்றத்தில் வந்த வழக்கு.
கர்ணன் குற்றவாளி என்று வழக்குத் தொடுப்பவர் முனைவர் ராஜகோபாலன்
கர்ணன் குற்றவாளி அல்லன் என்று மறுப்பவர் முனைவர் அறிவொளி அவர்கள்
இருவர் வாதங்களையும் கேட்டுத் தீர்ப்பு வழங்குபவர் சோ. சத்தியசீலன் அவர்கள்
தமிழ் இலக்கிய நேயர்களுக்கு இது ஒரு இரண்டுமணிநேர விருந்து.
கேட்க விரும்புவர்களுக்காக அந்தக் காணொளி கீழே தரப்பட்டுள்ளது. (நன்றி: வானவில் தமிழ்ச் சங்கம்)
கேட்டு மகிழுங்கள்!