உன் வாழ்க்கையே
ஒரு புத்தகம்
உன் பெயரே அதன் தலைப்பு
உன்னை உலகிற்கு
அறிமுகம் செய்வதே
உன் புத்தகத்தின் முகவுரை !
நீ
நாள்தோறும்
சந்திக்கும் சோதனைகள்
சிந்திக்கும் சிந்தனைகள்
செய்யும் முயற்சிகள்
அனுபவிக்கும் இன்பங்கள்
உன் புத்தகத்தின் பக்கங்கள் !
உன்
இறுதி நாளில்
கட்டாயம் முடிக்கவேண்டும்’
சுபம் என்னும்
உன் புத்தகத்தின் முடிவுரை !
உன்
வாழ்க்கையே ஒரு புத்தகம்
உயர்ந்த கொள்கையாக
இனிய வரலாறாக
புனித செயல்களாக நீ
வாழும் சுயசரிதையென
உலகம் உன்னை
நாளும் பாராட்ட வேண்டும் !
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்