காலா
ரஜினி -ரஞ்சித் கூட்டணியில் வந்திருக்கும் படம் காலா.
தளபதிக்குப் பிறகு ரஜினியை இவ்வளவு சிறப்பாக நடிக்க வைத்ததற்காக ரஞ்சித்தைப் பாராட்டலாம்.
தாதா தாத்தா குழந்தைகளுடன் விளையாடுவது, பழைய காதலியைப் பார்த்து பம்முவது, மனைவியுடன் கொஞ்சுவது, மகனிடம் கோபம் கொள்வது , இளவட்டங்களுடன் ஜாலியாக இருப்பது- ‘க்யா ரே செட்டிங்கா ? வாலே ஒத்தியா நிக்கறேன்’ – ரஜினி கலக்குகிறார். இப்படிச் சொன்னால் விமர்சகருக்கு வயது அறுபதுக்கு மேலே என்பது புரிந்துவிடும்.
தூள் பறக்கிற சண்டையில ரஜினியை ஓரங்கட்டிட்டியே ! தலைவருக்கு ஒரு டூயட் வைக்கலியே ! சூப்பர் ஸ்டாரோட பஞ்ச்சைக் காணமே ! இப்படி விமர்சனம் எழுதினால் நம்ம வயசு முப்பதுன்னு புரிஞ்சுப்பாங்க !
ராமர் ராவணன் எல்லாம் தேவையா என்றால் நமக்கு காவி கலர் பூசுவாங்க!
பாட்டு – பின்னணி இசை – நானாபடேகரின் அபார வில்லத்தனம் மற்றும் சின்னச் சின்னப் பாத்திரங்களின் அளவான நடிப்பு -ஜீப் எல்லாம் அருமையோ அருமை! என்று சொன்னால் ‘சரியா சொன்ன மச்சி’ என்று மில்லியனல்ஸ் எல்லாம் கை கொடுப்பாங்க!
‘கருப்பே அழகு காந்தலே ருசி’ என்பதை ஒப்புக் கொண்டாலும் ரஞ்சித்தின் காலா அப்படியில்லையே என்பதை நினைக்கும் போது து. தொ.அ.
(துக்கம் தொண்டையை அடைக்கிறது)